தமிழரின் தற்காப்புக் கலைகள் மிளிர்ந்த விழா; சிலம்பக்கலை நுணுக்கம் போதித்த பயிலரங்கு

தமிழரின் தற்காப்புக் கலைகள் மிளிர்ந்த விழா; சிலம்பக்கலை நுணுக்கம் போதித்த பயிலரங்கு

2 mins read
49f5c091-7402-4581-b72d-51efbe4180c5
-

சபிதா ஜெய­கு­மார்

சிங்­கப்­பூர் மர­பு­டைமை விழா-2023, இம்­மா­தம் முதல் தேதி­யில் தொடங்கி இம்­மா­தம் 28ஆம் தேதி­வரை நடை­பெ­று­கிறது.

இந்த ஆண்­டில் 20வது முறை­யாக நடக்­கும் அந்த விழா­வில் விளை­யாட்­டு­கள், பொதுப் போக்கு­வ­ரத்து ஆகி­ய­வற்­றின் வர­லாற்றை மைய­மா­கக் கொண்டு மர­பு­டைமை போற்­றிக் கொண்­டா­டப்படு­கிறது.

தேசிய மர­பு­டை­மைக் கழ­கம் இந்­திய கலாசார அமைப்­பு­க­ளு­டன் இணைந்து கருப்­பொ­ருளை ஒட்டி பல்­வேறு நிகழ்ச்­சி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­தது.

மர­பு­டைமை விழா­வின் ஓர் அங்­க­மாக இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தில் பொது­மக்­க­ளுக்­கான வர­வேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பொது­மக்­களுக்கு இல­வச அனு­மதி வழங்­கப்­பட்­டது.

லிட்­டில் இந்­தியா மர­பு­டை­மைப் பாதை­யில் சிறப்பு வழி­காட்டி பய­ணங்­க­ளி­லும் பொது­மக்­கள் பங்­கெ­டுத்­த­னர்.

லிட்­டில் இந்­தி­யாவைச் சுற்றி உள்ள முக்­கிய பாரம்­ப­ரிய இடங்­கள், முன்பு மக்­க­ளின் விளை­யாட்டு மைய­மாக இருந்த ஃபேரர் பார்க் பகுதி முத­லிய இடங்­களுக்கு வழி­காட்டி ஒரு­வர் அழைத்­துச் சென்று வர­லாற்­றுத் தக­வல்­களைப் பகிர்ந்­தார்.

"விழா­வின் கருப்­பொ­ருளை மைய­மா­கக்கொண்டு ஏற்­பாடு செய்­யப்­பட்ட நட­வ­டிக்­கை­கள் இவ்­வாண்­டின் நிகழ்ச்­சிக்­குத் தனித்­தன்மை கூட்­டி­யுள்­ளன," என்று இந்­திய மர­பு­டைமை நிலை­யத்­தின் திட்ட மேலா­ளர் திரு சுரேன் ராம­தாஸ் குறிப்­பிட்­டார்.

மக்­கள் தேர்ந்­தெ­டுத்து பங்­கெடுக்க மூன்று வித­மான வழி­காட்­டிப் பய­ணங்­கள் இருந்தன.

சிராங்­கூன் பகு­தி­யின் வர­லாற்­றைத் தெரிந்­து­கொள்ள வர­லாறு உலா; சம­யங்­கள் குறித்த புரி­தலை வளர்த்­துக்­கொள்ள பக்தி உலா; பல்­வேறு வித­மான பொருட்­களை வாங்க விரும்­பு­வோ­ருக்கு லிட்­டில் இந்­தி­யாவை சுற்­றி­யுள்ள கடை­க­ளைச் சென்று பார்க்­கும் உலா ஆகி­யவை அவற்­றில் உள்­ள­டங்­கும்.

மர­பு­டைமை விழா­வில் களரிப் பயிற்­சிப்­பள்­ளி­யும் இணைந்து சிலம்­பம் பயி­ல­ரங்­கிற்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது. பழ­மை­யான இந்­திய தற்­காப்­புக் கலை­யான சிலம்­பத்­தில் புதைந்­தி­ருக்­கும் சக்தி­யை­யும் அழ­கை­யும் பயி­ல­ரங்கு உணர்த்­தி­யது.

ஒரு காலத்­தில் ஆண்­கள் மட்­டுமே அணு­கக்­கூ­டி­ய­தாக இருந்த சிலம்­பம் இன்று பெண்­க­ளுக்­கும் வர­வேற்பு அளிக்­கிறது. கூச்­சம் இன்றி பெண்­கள் சிலம்­பம் கற்க ஊக்­கு­விக்­கிறது களரி.

பயி­ல­ரங்­கில் கலந்துகொண்­டோர் சிலம்­பாட்­டத்­தின் வர­லாற்­றைத் தெரிந்து கொண்­ட­து­டன் அதன் அடிப்­படை அசை­வு­க­ளை­யும் கற்­றுக்­கொண்­ட­னர்.

"தமி­ழர்­க­ளின் மர­பைக் கட்­டிக்­காக்­கும் வகை­யில் சிலம்­பத்தை அதி­க­மா­னோ­ருக்கு அறி­மு­கப்­படுத்த இப்­ப­யி­ல­ரங்கு வழி­வகுத்­தது. இன்­றைய நவீன உல­கில் பழமை வாய்ந்த தற்­காப்புக் கலை­க­ளுக்கு உயி­ரூட்­டு­வது நோக்­கம்," என்று களரி பயிற்­சிப்­பள்­ளி­யின் பயிற்­று­விப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.