கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய முதியோருக்கு வலியுறுத்து

2 mins read
31b0efef-c671-4aef-94fe-acf0d7953c83
குறைந்­த­பட்ச பாது­காப்­புக்குத் தேவை­யான தடுப்­பூ­சி­களை முற்­றி­லும் போட்­டுக்­கொண்டு இரா­த­வர்­கள் கூடு­மானவரை விரை­வாக அவற்­றைப் போட்­டுக்­கொள்­ளும்­படி கொவிட்-19 தடுப்­பூசி வல்­லு­நர் குழு கூறியுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் 60 வய­தும் அதற்­கு மேற்­பட்ட வய­துள்­ளோரும், கடை­சி­யாக பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்டு ஓராண்டு ஆகி­யி­ருந்­தால், ஈராற்­றல் பூஸ்­டர் தடுப்­பூ­சியை இன்­ன­மும் போட்டுக்­கொள்­ளா­மல் இருந்­தால் அந்­தத் தடுப்­பூ­சியை போட்­டுக்­கொள்­ளும்­படி வலி­யு­றுத்­தப்­பட்டுள்­ள­னர்.

கடை­சி­யாக ஊசி போட்­டுக்­கொண்­ட­தற்கு ஐந்து மாதம் கழித்து அல்­லது அதற்­கும் அதிக மாதங்­க­ளுக்­குப் பிறகு முதி­யோர் அந்த ஊசி­யைப் போட்டுக்­ கொள்­ள­லாம்.

குறைந்­த­பட்ச பாது­காப்­புக்குத் தேவை­யான தடுப்­பூ­சி­களை முற்­றி­லும் போட்­டுக்­கொண்டு இரா­த­வர்­கள் கூடு­மானவரை விரை­வாக அவற்­றைப் போட்­டுக்­கொள்­ளும்­படி கொவிட்-19 தடுப்­பூசி வல்­லு­நர் குழு கூறியுள்ளது.

சிங்­கப்­பூ­ரில் கடந்த வாரங்­களில் கொவிட்-19 தொற்று அதி­க­ரித்து இருக்­கிறது. இதன் கார­ண­மாக அதி­க­மா­னோர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்­சைக்­காக சேர்ந்­துள்­ள­னர் என்று அந்­தக் குழு அறிக்கையில் தெரி­வித்­தது.

மருத்­து­வ­ம­னை­களில் சேர்க்­கப்­பட்டுள்ள கொரோனா நோயாளி­கள் தேவை­யான தடுப்பூசி­களைப் போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கக்­கூ­டிய சாத்­தி­யம் அதி­கம். ஈராற்­றல் தடுப்­பூ­சி­யை­யும் அவர்­கள் போட்­டுக்­கொள்­ளா­மல் இருக்­கக்­கூ­டும்.

மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு உள்ள கொவிட்-19 நோயாளி­களில் கணி­ச­மா­னோர் குறைந்­த­பட்ச பாது­காப்­புக்­குத் தேவை­யான தடுப்­பூ­சி­களை இன்­ன­மும் போட்­டுக்­கொள்­ள­வில்லை என்று குழு குறிப்­பிட்­டது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகுதி உள்­ள­வர்­கள் குறைந்­த­பட்­சம் மூன்று எம்­ஆர்­என்ஏ தடுப்­பூ­சி­களை அல்­லது நோவா­வேக்ஸ் தடுப்­பூ­சி­களை அல்­லது நான்கு சினோ­வேக்-கொரோ­னா­வேக் தடுப்­பூ­சி­களைப் போட்­டுக்­கொண்டு குறைந்­த­பட்ச பாது­காப்பை உறு­தி­செய்­து­கொள்­ளும்­படி குழு வலி­யு­றுத்தி உள்­ளது.

கொவிட்-19 தொற்று அதி­கரித்து இருப்­பதற்கு உரு­மா­றிய ஓமிக்­ரான் கிரு­மி­தான் காரணம்.

ஈராற்­றல் தடுப்­பூசி மருந்து அந்த உரு­மா­றிய கிரு­மி­க­ளுக்கு எதி­ராக சிறந்த பாது­காப்பை வழங்­கு­கிறது.

கொவிட்-19 தொற்று கார­ண­மாக கடு­மை­யான பாதிப்­பு­க­ளைத் தவிர்த்­துக்­கொள்ள வேண்­டு­மா­னால் போதிய அள­வுக்குப் பாது­காப்பு ஆற்­றலை உட­லில் ஏற்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும். இதற்கு தடுப்­பூசி அவ­சி­ய­மா­னது. குறிப்­பாக 60 வய­தும் அதற்­கு அதிக வய­தும் உள்ள முதி­யோ­ருக்கு இது மிக முக்­கி­யம்.

முதி­யோர், மருத்­துவ ரீதி­யில் எளி­தில் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலை­யில் இருப்­போர் கூடு­மான வரை விரை­வாக ஈராற்­றல் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்டு குறைந்­த­பட்ச பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும்.