குடும்பச் சொத்துகளை நிர்வகிக்கும் அலுவலகங்கள் அதிகரிப்பு

1 mins read
c5862f32-7ce5-4aca-805e-a54b3c2f8afe
-

சிங்­கப்­பூ­ரில் குடும்­பச் சொத்­து­களை நிர்­வ­கிக்­கும் அலு­வ­ல­கங்­கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. இந்த ஆண்­டில் இது­வரை அத்­த­கைய 182 புதிய அலு­வ­ல­கங்­கள் திறக்­கப்­பட்டு உள்­ளன.

சென்ற ஆண்­டில் 690 அலு­வ­ல­கங்­கள் திறக்­கப்­பட்­டன. இந்த எண்­ணிக்கை 2021ஆம் ஆண்­டில் 672 ஆக இருந்­தது. 'ஹேன்ட்­ஷேக்ஸ்' என்ற கணி­னித் தக­வல் பகுப்­பாய்வு நிறு­வ­னம் இவ்­வாறு தெரி­விக்­கிறது.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள் திறக்­கின்ற இத்­த­கைய அலு­வ­ல­கங்­கள்­தான் இவற்­றில் அதி­கம். சீனா, மலே­சியா, ஹாங்­காங்­கைச் சேர்ந்த அலு­வ­ல­கங்களும் அண்­மைய ஆண்­டு­களில் இங்கு செயல்­ப­டத் தொடங்கி உள்­ளன.

கடந்த 2021, 2022ஆம் ஆண்டு­களில் செயல்­பட்ட இத்­த­கைய அலு­வ­ல­கங்­கள் எண்­ணிக்கை கொரோ­னா­வுக்கு முன்பு இருந்­த­வற்­றை­விட அதி­கம் என்று பகுப்­பாய்வு நிறு­வ­னம் கூறி உள்­ளது.

ஒரு குடும்­பச் சொத்தை நிர்­வகிக்­கும் தனி குடும்ப அலு­வ­ல­கங்­கள் எண்­ணிக்கை 2021 ஆண்டு முடி­வில் கிட்­டத்­தட்ட 700 ஆக இருந்­தது என்று சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் கணிக்­கிறது. இந்த எண்­ணிக்கை 2020ஆம் ஆண்­டில் 400தான் என்பது குறிப்பிடத்தக்கது.