கெப்பல் ரோட்டில் சனிக்கிழமை விபத்தில் சிக்கிய ஒரு கார் சிதைந்துவிட்டது. அதில் இருந்த மாது காயம் அடைந்தார். அந்த மாதை அப்படியே விட்டுவிட்டு ஓட்டுநர் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார்.
விபத்தில் சிக்கிய 28 வயது மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் அப்போது சுயநினைவுடன் இருந்தார்.
ஷென்டன் வே நோக்கிச் செல்லும் கெப்பல் ரோட்டில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணிக்குத் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புத் துறையும் கூறின.
சேதம் அடைந்த காரைக் காட்டும் படங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு எஸ்ஜி ரோடு விஜிலண்ட் ஃபேஸ்புக் குழுமத்தில் இடம்பெற்றன. விபத்து பற்றிய காவல்துறை புலன்விசாரணை தொடர்கிறது.
அந்தக் காரின் ஓட்டுநர், விபத்து நிகழ்ந்ததும் அந்த இடத்தில் இருந்து ஓடிவிட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.

