தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராஜா: இளையோரை கொண்டு இமாலய சாதனை படைப்பேன்

4 mins read
fb8942ef-c67d-4354-8466-e3521a975ef6
-

தமி­ழக தொழில், வர்த்­த­கத் துறை அமைச்­ச­ர் தமிழ் முரசுக்குப் பேட்டி

ஆ. விஷ்ணு வர்­தினி

தமி­ழக அமைச்­சர் டி.ஆர்.பி. ராஜா, தமி­ழக தொழில், முத­லீட்டு ஊக்­கு­விப்பு, வர்த்­த­கத் துறை அமைச்­ச­ராக பதவி­யேற்று 13 நாள்களே ஆன நிலை­யில், தமிழக முதல்­வர் மு.க.ஸ்டா­லினுடன் சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ரத்­துவ வரு­கை­ய­ளித்­துள்­ளார்.

அவர், தமி­ழ­கத்­தின் மிக முக்­கிய வள­மான இளை­ய­ரைப் பொரு­ளி­யல் வளர்ச்­சி­யி­லும் நாட்டு மேம்­பாட்டி­லும் மைய­மாக கருதி செயல்­படும் முனைப்­பில் உள்­ளார்.

வளர்ச்­சி சிறப்­பு­களை முன்­னி­றுத்தி தமி­ழ­கத்தை அடை­யாளப்­படுத்­து­வது, பசுமைப் பொரு­ளி­யல், செயற்கை நுண்­ண­றவு, வான்­வெ­ளித் துறை, மின்­னி­லக்­க­மாக்­கல் போன்ற வளர்ந்­து­வ­ரும், எதிர்­கா­லத்­துக்­குத் தேவை­யான துறை­க­ளுக்கு முன்­னு­ரிமை; தொழில்­சார்ந்த கல்­வித் திட்­டங்­கள் வழி திற­னா­ளர்­க­ளைப் பெருக்­கு­வது, வேலை வாய்ப்­பைப் பெருக்­கும் முத­லீ­டு­கள் என்று தமது முன்­னு­ரி­மைத் திட்­டங்­களை தமிழ் முர­சு­டன் பகிர்ந்­து­கொண்­டார் 46 வயது உள­வி­யல் துறை­ முனை­வரான திரு ராஜா.

தொழில்­துறை, பொரு­ளி­யல், மக்­க­ளின் வாழ்க்­கைத்­த­ரம் என அனைத்­தி­லும் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை எடுத்­துக்­கூ­றும் வித­மாக தமி­ழ­கத்­தின் அடை­யாளத்தை மாற்­றி­ய­மைத்து பொலி­வூட்­டு­வது திரு ராஜா­வின் முன்­னு­ரி­மைத் திட்­டங்­களில் ஒன்று.

வாய்ப்­பு­களும் வளங்­களும் நிறைந்த தமி­ழ­கத்­தின் பொரு­ளி­யல் சூழலை முத­லீட்­டா­ளர்­கள் விரி­வாக அறி­வது இன்றி­மை­யா­தது எனக் கரு­தும் இவர் இதற்­கான பணி­க­ளைத் துவங்கி­யுள்­ளார். அடுத்த மூன்று மாதங்களில் இது சாத்­தி­ய­மா­கும் என்­றாரவர். பன்­மு­கத்­தன்­மை­வாய்ந்த முத­லீ­டு­களை ஈர்ப்­பது, நீண்­ட­கால நிலைத்­தன்­மை­கொண்ட வேலை­வாய்ப்­பு­க­ளைப் பல­தரப்­பி­னருக்­கும் ஏற்­ப­டுத்­து­வது எனும் இலக்கு­க­ளு­டன் தமது அமைச்சு செயல்­ப­டு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தின் 15 மாவட்­டங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ள 24 தொழிற்­பேட்­டை­கள் வேலை வாய்ப்­புக்­கான முக்­கிய மையங்­களாய் திகழ்­கின்­றன.

கூடு­த­லான துறை­களில் தொழிற்­பேட்­டை­களை எழுப்பு­வ­து­டன், நவீன உல­கின் விசைப்­பொறி­க­ளாக விளங்­கும் செயற்கை நுண்­ண­றிவு, புதுப்­பிக்­கத்­தக்க ஆற்­றல், தொழில்­நுட்­பம் ஆகிய துறை­களை விரி­வு­ப­டுத்தி வேலை­வாய்ப்­பு­க­ளைப் பெருக்­கு­வது முன்­னு­ரி­மை­யாய் இருப்­ப­தாக அமைச்­சர் தெரி­வித்­தார்.

அண்­மை­யில் செயல்­ப­டுத்­தப்­பட்ட தமி­ழ­கத்­தின் மின்­சார வாக­னக் கொள்கை தமி­ழ­கத்தை தெற்­கா­சி­யா­வி­லேயே மின்­சார வாகன உற்­பத்­திக்­கான சிறந்த தள­மாக ஆக்கும் எனும் நம்­பிக்கை நில­வு­கிறது.

நீடித்த நிலைத்­தன்­மைக்கு இட்­டுச் செல்­லும் அனைத்து முயற்­சி­க­ளை­யும் ஆத­ரிக்க தமி­ழ­கம் ஆர்­வம் கொண்­டுள்­ள­து.

இந்­தி­யா­வின் வான்­வெளி தொழில்­நுட்­பத்­துக்­கான மையப்­புள்­ளி­யாக தமி­ழ­கம் விளங்­கும் கன­வை­யும் அவர் முன்­வைத்­தார்.

இத்­து­றை­களில் பாகு­பா­டற்ற, எட்­டு­ம­ள­வி­லான வேலை வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­து­வது அமைச்சு கொண்­டுள்ள திட்­டங்­களில் பிர­தா­ன­மாக உள்­ளது.

இந்­தி­யா­வி­லேயே பணி­பு­ரி­யும் பெண்­கள் அதி­கம் கொண்­டுள்ள மாநி­லம் தமி­ழ­கமே. ஆக அதி­க­ள­வில் தொழில்­ம­ய­மான மாநில­மும், ஆக அதி­க­மான நுண், சிறு, நடுத்­தர நிறுவனங்க­ளைக் கொண்ட மாநி­ல­மும் அதுவே.

"இந்­தி­யா­விற்கே நுழை­வா­யிலாக விளங்­கு­கிறது தமி­ழ­கம். பாது­காப்பு, உள்­கட்­ட­மைப்பு, பண்­பாடு ஆகி­யவை அங்கு தழைக்­கின்­றன. தமி­ழக மாண­வர்­க­ளைத் தொழில்­து­றைக்­குத் தயார்­ப­டுத்­தும் கல்­வியை வழங்கு­வ­தில் கவ­னம் செலுத்­தப்­பட்டு வரு­கிறது," என்றாரவர்.

சிங்­கப்­பூ­ரின் ஸ்கில்ஸ்­ஃபியூச்­சர் திட்­டத்தை ஒத்த தமி­ழ­கத்­தின் 'நான் முதல்­வன்' திட்­டம் மூலம் மாண­வர்­க­ளின் திற­மை­க­ளைக் கண்­ட­றிந்து திறன் மேம்­பாடு, வாழ்க்­கைத்­தொ­ழில் வழி­காட்­டு­தல் முத­லி­ய­வற்றை அரசு வழங்கி வரு­கிறது.

இது பற்றி கூறு­கை­யில், "கல்­விக்­க­ழ­கங்­க­ளுக்­கும் தொழில்­து­றைக்­கும் இடையே ஓர் இடை­வெளி உள்­ளது. இந்த இடை­வெ­ளியை அகற்றி ஒத்­தி­சைவு ஏற்­ப­டுத்­து­வது ஒரு முக்­கிய இலக்­காக உள்­ளது," என்­றார் அமைச்­சர்.

தொழில்­துறை வல்­லு­நர்­களை மாண­வர்­க­ளு­டன் இணைக்­கும் திறன் மேம்­பாட்­டிற்­கான சிறப்பு அமைப்பு ஒன்­றினை நிறு­வும் திட்­டம் ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­வ தாகக் கூறிய அமைச்­சர், மாண­வர் மேம்­பாடு தொடர்­பில் சிங்­கப்­பூ­ரின் திட்­டங்­க­ளி­லி­ருந்து கற்­றுக்­கொள்ள ஏரா­ள­மா­னவை இருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

உல­கத்­திற்கே ஒரு பொருளி­யல் மைய­மாகத் திகழும் சிங்­கப்­பூர் இந்­தி­யா­வு­டன் நீண்­ட­கால இணக்­கங்­க­ளைக் கொண்டுள்ளது என்ற அமைச்சர், பொரு­ளி­யல், தொழில்­துறை, பாரம்­பரி­யம் என பல வ­கை­களில் இரு நாடு­களும் கொண்­டுள்ள உற­வு­களை குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூர் மாண­வர்­க­ளின் பரந்த கண்­ணோட்­டம் குறிப்­பி­டத்­தக்­க­தென கூறிய அவர், தற்­போ­தைய சிங்­கப்­பூர்த் தமி­ழர்­க­ளைப் போலவே அடுத்த தலை­மு­றை­யி­ன­ரும் தமி­ழ­கத்­தின் தொழில்­துறை மேம்­பாட்­டில் பங்கு வகிப்­பர் என நம்­பிக்கை தெரி­வித்­தார்.

தமி­ழர்­கள் சிங்­கப்­பூ­ரில் கணி­ச­மான அள­வில் வாழ்­கின்­ற­னர்.அவர்­க­ளுக்­குத் தோள்­கொ­டுக்­கும் கூடு­தல் திட்­டங்­களை விரை­வில் எதிர்­பார்க்­க­லாம் என்­றாரவர்.

அமைச்­ச­ராக அவர் மேற்­கொண்­டி­ருக்­கும் முதல் அதி­காரத்­துவ வெளி­நாட்­டுப் பய­ணம் இது. அடுத்து ஜப்­பா­னுக்­கும் மற்ற நாடு­க­ளுக்­கும் செல்­ல­வுள்­ளார்.

தமிழகத்தில் வரும் ஜன­வரியில் நடக்­க­வுள்ள உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டிற்கு முன்­னோட்­ட­மாக இந்த வெளி­நாட்­டுப் பய­ணங்­கள் அமை­வ­தாக அமைச்­சர் ராஜா குறிப்­பிட்­டார்.

தகு­திக்கு முன்­னு­ரிமை அளிக்­கும் சிங்­கப்­பூ­ரின் அடித்­த­ளக் கூறு அமைச்­ச­ரின் மன­தில் ஆழ பதிந்த ஒன்­றா­கும். அமரர் திரு லீ குவான் இயூவின் ரசி­கராக தம்மை அடை­யா­ளப்­படுத்­திக்­கொள்­ளும் அவர், 'எல்­லோ­ருக்­கும் எல்­லாம்' எனும் கொள்­கையை தமது அர­சி­யல் முறை­யில், ஆளுமை­யில் முன்­னி­லைப்­ப­டுத்­து­கி­றார்.

திரு ராஜா, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பொரு­ளா­ள­ரும் முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரு­மான டி.ஆர். பாலு­வின் மக­னா­வார். தந்­தை­யின் நிழ­லிலன்றி தமக்­கென ஓர் அடை­யா­ளம் பதிக்­க­வேண்­டும் என்­பது இவரது விருப்­பம்.