இரண்டு விலங்குவதை சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதை அடுத்து அவை பற்றி புலன்விசாரணை நடந்து வருவதாக விலங்கு, கால்நடை சேவை அமைப்பு கூறியது.
ஹவ்காங்கில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக் ஒன்றின் அடிவாரத்தில் ஒரு பூனை இறந்து கிடந்தது. ஜூச்சியாட்டில் ஹேக் ரோட்டில் பூனைகளைக் காணவில்லை என்று கவலை தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி கேட்டதற்குப் பதில் அளித்த அந்த அமைப்பின் குழும இயக்குநர் திருவாட்டி ஜெசிக்கா குவோக், இந்த இரு சம்பவங்கள் பற்றி விசாரணை நடப்பதாகக் கூறினார்.
இச்சம்பவங்கள் தொடர்பில் ஊகமாக எந்தத் தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் பாதிப்பு இடையூறு இன்றி புலன்விசாரணை நடக்க உதவும்படியும் பொதுமக்களை அந்தக் குழும இயக்குநர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

