காணொளிக் கண்காணிப்பு கட்டாயமாக்கப்படுகிறது

காணொளிக் கண்காணிப்பு கட்டாயமாக்கப்படுகிறது

3 mins read
11613a0d-79b1-478a-b19a-68813280df2c
-

ஊழி­யர் பாது­காப்பை மேம்­ப­டுத்த அடுத்த மாதத்­தி­லி­ருந்து $5 மில்லி­ய­னுக்­கும் அதி­க­மான திட்­டங்­க­ளுக்­கான கட்­டு­மா­னத் தளங்­களில் காணொளி மூலம் கண்­கா­ணிக்­கும் முறை கட்­டா­ய­மாக்­கப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டுக்­கான தேசிய வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தார இயக்­கத்­தின் தொடக்க விழா சிங்­கப்­பூர் எக்ஸ்­போ அரங்கில்­நேற்று நடை­பெற்­றது.

வேலை­யிட மர­ணங்­கள், காயங்­கள் ஆகி­ய­வற்­றைக் குறைக்க பல நட­வ­டிக்­கை­கள் அறி­விக்­கப்­பட்­டன.

அவற்­றில் இந்­தக் கட்­டாய காணொ­ளிக் கண்­கா­ணிப்­பும் ஒன்று.

இந்­தத் திட்­டத்­துக்­காக பல கேம­ராக்­க­ளைக் கொண்ட கட்­ட­மைப்பு, திரை­கள், ஒளிப்­ப­திவுச் சாத­னங்­கள், காணொ­ளி­கள் ஆகி­யவை பயன்­ப­டுத்­தப்­படும்.

இந்த அணு­கு­முறை, வேலை ­இ­டத்­தில் பாது­காப்­பற்ற பழக்­க­வழக்­கங்­க­ளைத் தடுக்க உதவும் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அத்­து­டன் வேலை­யி­டப் பாது­காப்பு, சுகா­தா­ரம் தொடர்­பான அபா­யங்­களை அடை­யாம் காண­வும் விரும்­பத்­த­காத சம்­ப­வங்­கள் ஏற்­பட்­டால் விசா­ரணை நடத்­த­வும் இந்த அணு­கு­முறை பயன்­படும்.

அதிக அபா­ய­மிக்க நட­வ­டிக்­கை­கள் நிக­ழும் கட்­டு­மா­னத் தளங்­களில் காணொ­ளிக் கண்­கா­ணிப்பு முறை கட்­டா­யம் தேவைப்­படும் என்று தெரி­வித்த அதி­கா­ரி­கள், இந்த அணு­கு­முறையை நடை­மு­றைப்­ப­டுத்த ஏற்­படும் செல­வு­களை சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­கள் ஏற்க வேண்­டும் என்று கூறி­னர்.

கடந்த இரண்டு ஆண்­டு­களில் பாது­காப்பு தொடர்­பாக மிக மோச­மான விதி­மீ­றல்­களில் ஈடு­பட்ட நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­தக் காணொ­ளிக் கண்­கா­ணிப்பு முறை கட்­டா­ய­மாக்­கப்பட்டிருந்தது.

இந்த அணு­கு­முறை குறித்து திரட்­டப்­பட்ட கருத்­து­கள் ஊக்­க­மளிக்­கும் வகை­யில் இருப்­ப­தாக மனி­த­வள அமைச்சு கூறி­யது.

காணொ­ளிக் கண்­கா­ணிப்பு முறை­யின் வழி கட்­டு­மா­னத் தளங்­களில் உள்ள வேலை­யி­டச் சூழலை முன்­பை­விட உன்னிப்பாகக் கண்­கா­ணிக்க முடி­வ­தா­கத் தெரி­விக்­க­ப்பட்­டது.

இந்த அணு­கு­மு­றை­யைத் தவிர்த்து, வேறு சில நட­வ­டிக்­கை­களும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படு­கின்­றன.

அரசாங்­கத்­தின் எதிர்­கால கட்டு­மா­னத் திட்­டங்­க­ளுக்­கான பாது­காப்பு விதி­மு­றை­களை மேலும் கடு­மை­யாக்­கு­வது, அதிக அபா­யம் உள்ள துறை­களைச் சேர்ந்த அனைத்து நிறு­வ­னங்­க­ளின் தலைமை நிர்­வா­கி­கள், இயக்­கு­நர்­கள் ஆகி­யோர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்­திலி­ருந்து பாது­காப்பு தொடர்­பான அரை நாள் நிகழ்ச்­சி­யில் பங்­கெ­டுக்க வைப்பது ஆகியவையே அவை.

வேலை­யி­டங்­களில் படு­கா­யம் அடைந்­தோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­ததை அடுத்து இந்­தத் திட்­டங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதத்­துக்­கும் கடந்த மார்ச் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் படு­கா­யம் அடைந்த ஊழி­யர் விகி­தம் அதி­க­ரித்­தது.

ஒவ்­வொரு 100,000 ஊழி­யர்­களில் 19.2 ஊழி­யர்­கள் படு­கா­யம் அடைந்­த­தா­கப் பதி­வா­னது. கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்­துக்­கும் ஆகஸ்ட் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் ஒவ்­வொரு 100,000 ஊழி­யர்­களில் 16.8 ஊழி­யர்­கள் படு­கா­யம் அடைந்­த­தா­கப் பதி­வா­னது.

கடந்த ஆண்டு ஜன­வரி மாதத்­துக்கும் ஆகஸ்ட் மாதத்­துக்கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் வேலை­யிட மர­ணங்­கள் அதி­க­ரித்­தன.

அக்­கா­ல­கட்­டத்­தில் 36 வேலை­ இட மர­ணங்­கள் பதி­வா­கின. கடந்த ஆண்டு மொத்­தம் 46 வேலை­யிட மர­ணங்­கள் பதி­வா­கின. இதை­ய­டுத்து, கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 1ஆம் தேதி­யிலி­ருந்து வேலை­யி­டங்­களில் பாது­காப்பு விழிப்­பு­நிலை உயர்த்­தப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு கூறியது. இருப்­பி­னும், வேலை­யி­டங்­களில் படு­கா­யம் அடைந்­தோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தது.

வேலை­யி­டப் பாது­காப்பு விழிப்பு­நி­லைக்­கான கால­கட்­டம் ஏற்­கெ­னவே மூன்று மாதங்­களுக்கு நீட்­டிக்­கப்­பட்­ட­தா­க­வும் அது மேலும் நீட்­டிக்­கப்­ப­டாது என்றும் இயக்­கத்­தின் தொடக்க விழா­வில் பேசிய மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது தெரி­வித்­தார்.

வேலை­யி­டப் பாது­காப்பு விழிப்பு­நிலை அதன் இலக்கை எட்­டி­விட்­ட­தாக திரு ஸாக்கி கூறி­னார்.

ஊழி­யர் பாது­காப்புக்கு முன்­னுரிமை வழங்க வேண்­டும் என்று முத­லா­ளி­க­ளுக்­குப் புரிந்து­விட்­ட­தா­க­வும் இதன் விளை­வாக வேலை­யிட மர­ணங்­கள் குறைந்­தி­ருப்­ப­தா­க­வும் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது தெரி­வித்­தார்.