தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடக்கநிலை 1 பதிவு ஜூலை 4 தொடங்குகிறது; நடப்புக்கு வரும் புதிய இணையவாசல்

2 mins read
dbfc680f-47d9-4518-bb7c-4991888b766d
-

அடுத்த ஆண்டு தொடக்­க­நிலை ஒன்­றாம் வகுப்­பில் சேர்ந்து பயில இருக்­கும் மாண­வர்­க­ளுக்­கான பதி­வு வரும் ஜூலை மாதம் 4ஆம் தேதி­யன்று தொடங்­கு­வ­தாக கல்வி அமைச்சு நேற்று அறி­வித்­தது.

தங்­க­ளுக்கு விருப்­ப­மான பள்­ளி­களில் தங்­கள் பிள்­ளை­க­ளைப் பதிவு செய்ய 1, 2ஏ, 2பி, 2சி, 2சி (துணை) ஆகிய பிரி­வு­க­ளின்­கீழ் இவ்­வாண்டு முதல் பெற்­றோர் இணை­யம் வழி தொடக்­க­நிலை 1 பதிவு இணை­யவா­ச­லைப் பயன்­ப­டுத்­த­லாம்.

ஜூலை மாதம் 4ஆம் தேதி­யன்று இந்த இணை­ய­வா­ச­லைப் பயன்­ப­டுத்­த­லாம். கல்வி அமைச்­சின் தொடக்­க­நிலை 1 பதிவு இணையத்­த­ளம் மூலம் புதிய இணை­ய­வா­ச­லைப் பயன்­ப­டுத்­த­லாம்.

இவ்­வாண்­டி­லி­ருந்து 1, 2ஏ, 2பி ஆகிய பிரி­வு­க­ளின்­கீழ் விண்­ணப்­பம் செய்ய இணை­யம் வழி படி­வத்­தைப் பயன்­ப­டுத்த முடி­யாது. மாறாக, புதிய இணை­ய­வா­ச­லைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

இதற்கு முந்­தைய ஆண்­டு­களில் 2சி, 2சி (துணை) ஆகிய பிரி­வு­க­ளின்­கீழ் விண்­ணப்­பம் செய்ய தொடக்­க­நிலை 1 இணை­யக் கட்­ட­மைப்­பைப் பயன்­ப­டுத்த வேண்டி இருந்­தது.

இனி அப்­பி­ரி­வு­க­ளின்­கீழ் விண்­ணப்­பம் செய்­ய­வும் புதிய இணை­ய­வா­ச­லைப் பயன்­ப­டுத்த வேண்­டும்.

புதிய இணை­ய­வா­ச­லைப் பயன்­ப­டுத்த பெற்­றோர் சிங்­பாஸ் கணக்­கைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­தது.

தொடக்­கப்­பள்­ளி­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­ப­தில் பெற்­றோ­ருக்கு உத­வும் வகை­யில் முந்­தைய ஆண்டு நடத்­தப்­பட்ட தொடக்­க­நிலை 1 பதி­வின் தர­வு­களைக் கல்வி அமைச்சு வெளி­யி­டும். இந்த அணு­கு­முறை இவ்­வாண்டு முதல் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்.

நேற்று முதல் https://www.moe.gov.sg/primary/p1-registration/past-vacancies-and-balloting-data எனும் இணை­யத்­த­ளத்­துக்­குச் சென்று கடந்த ஆண்­டின் பதிவு தொடர்­பான தர­வு­க­ளைப் பெற்­றோர் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

அதில் பள்­ளி­களில் இருக்­கும் காலி­யிடங்­கள், விண்­ணப்­ப­தா­ரர்­களின் எண்­ணிக்கை, ஒவ்­வொரு பிரி­வுக்­குக்கீழ் நடத்­தப்­பட்ட குலுக்­கல் முறைக்­கான முடி­வு­கள் ஆகி­யவை இடம்­பெ­றும்.

தங்­கள் வீட்­டி­லி­­ருந்து 2 கிலோ­மீட்­டர் தூரத்­தில் இருக்­கும் தொடக்­கப்­பள்­ளி­க­ளைப் பற்றி இந்த இணை­யத்­த­ளத்­தி­லி­ருந்து பெற்­றோர் தெரிந்­து­கொள்­ள­லாம் என்று அமைச்சு கூறி­யது. அப்­பள்­ளி­களில் உள்ள காலி­யி­டங்­களை­விட கூடு­தல் விண்­ணப்­ப­தாரர்­கள் இருந்­தார்­களா என்­பது குறித்து பெற்­றோர் தெரிந்­து­கொள்­ள­லாம்.

இவ்­வாண்டு பதி­வு நடவடிக்கையில் விண்­ணப்­பம் செய்­யும் பெற்­றோர் பள்­ளி­களில் எஞ்­சி­யுள்ள இடங்­க­ளின் எண்­ணிக்­கை­யைப் பற்­றிய தக­வல்­களை­யும் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

இந்­தத் தக­வல் அடுத்த மாதம் நடுப்­ப­கு­தி­யி­லி­ருந்து வழங்­கப்­படும்.

ஆனால் இணை­யப்­பக்­கத்­தி­லி­ருந்து பெறப்­படும் தர­வு­கள் மாறக்­கூ­டும் என்று அமைச்சு கூறி­யது. பதி­வு நடவடிக்கை நிறை­வ­டை­வ­தற்­குள் பெற்­றோர் தங்­கள் விண்­ணப்­பங்­களைத் திரும்­பப் பெற­லாம் என்­றும் மாற்­றங்­க­ளைச் செய்­ய­லாம் என்றும் அது தெரி­வித்­தது.

கல்வி அமைச்­சின் இணை­யப்­பக்­கத்­தில் இல்­லாத கூடு­தல் தக­வல்­க­ளை­யும் இந்த இணை­யத்­த­ளத்­தின்­மூ­லம் பள்­ளி­க­ளால் வழங்க முடி­யும்.

பதிவு செய்­யும்­போது உதவி தேவைப்­பட்­டால் அந்­தந்த பள்ளி­களு­டன் பெற்­றோர் மின்­னஞ்­சல் அல்­லது தொலை­பேசி மூலம் பதிவு செய்­யும் நாள்­களில் காலை 9 மணிக்­கும் மாலை 4.30 மணிக்­கும் இடைப்­பட்ட நேரத்­தில் தொடர்­பு­கொள்­ள­லாம்.

கூடு­தல் தக­வ­லுக்கு moe.gov.sg/primary/p1-registration எனும் இணை­யப்­பக்­கத்தை நாட­லாம்.

தொடக்­க­நிலை ஒன்­றாம் வகுப்புக்கான பதிவு நடவடிக்கை வரும் அக்­டோ­பர் மாதம் 31ஆம் தேதி­யு­டன் நிறை­வு­பெ­றும்.