சட்டவிரோத கும்பல்: 27 ஆடவர்கள் கைது

சட்டவிரோத கும்பல்: 27 ஆடவர்கள் கைது

1 mins read
312cba4a-6b56-4e31-b2c2-6223cca178d3
-

சட்­ட­வி­ரோத கும்­பல் உறுப்­பி­னர்­கள் எனச் சந்­தே­கிக்­கப்­படும் 19க்கும் 45 வய­துக்­கும் இடைப்­பட்ட 27 ஆட­வர்­க­ளைக் காவல்­து­றை­யி­னர் கைது

செய்­துள்­ள­னர்.

மே மாதம் 21ஆம் தேதி, குற்றவியல் புல­னாய்­வுத் துறை­யின் குண்­டர் கும்­பல் பிரி­வும் போக்­கு­வ­ரத்­துக் காவல்­து­றை­யும் ஹவ்­காங் அவென்யூ 3ல் நடத்­திய கூட்டு நட­வ­டிக்­கை­யில், அந்த ஆட­வர்­களில் சிலர், குண்­டர் கும்­பல் சின்­னங்­க­ளைக் கொண்­ட­தாக நம்­பப்­படும் மோட்­டார் சைக்­கிள் கவ­சங்­க­ளு­ட­னும் சட்­டை­க­ளு­ட­னும் காணப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், போக்­கு­வ­ரத்­துக் காவல்­துறை அதி­கா­ரி­யின் மேற்­பார்­வை­யில் 20க்கும் மேற்­பட்­டோர் சாலை­யோ­ர­மாக தங்­கள் மோட்­டார் சைக்­கிள்­க­ளைத் தள்­ளிக்­கொண்டு சென்­ற­தைக் காட்­டும் காணொ­ளி­கள் இணை­யத்­தில் வலம் வந்­தன.

அந்த 27 ஆட­வர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தப்­படுவதா­க­வும் ஒழுங்­கு­முறை தொடர்­பான மற்ற குற்­றங்­க­ளுக்­காக, நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் அவர்­க­ளி­டம் விசா­ரணை நடத்­தும் என்­றும் காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர்.

சட்­ட­வி­ரோ­தக் கும்­பல் உறுப்­பி­னர்­கள் என நிரூ­பிக்­கப்­பட்­டால் மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத் தண்­டனை, $5,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.