சென்ற 2022ஆம் ஆண்டு 13 மோசடிக் கும்பல்கள் பிடிபட்டன.
ஆனால், இவ்வாண்டு இதுவரை வெளிநாட்டு அமலாக்கப் பிரிவுகளின் உதவியுடன் எட்டு மோசடிக் கும்பல்கள் பிடிபட்டுள்ளன. இப்படி மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் தங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
நேற்று ஆர்ச்சர்ட் ஹோட்டலில் உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் பதவி உயர்வு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
அதில் 351 உள்துறைக் குழு அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களில், மோசடிக் கும்பல்கள் தொடர்பாக முனைப்புடன் செயலாற்றிய காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
கடந்த 2022ஆம் ஆண்டு மோசடிக் கும்பல்களின் கைவரிசையால் பாதிக்கப்பட்டோர் $660.7 மில்லியன் இழந்தனர்.
இது 2021ஆம் ஆண்டில் இழந்த $$632 மில்லியனைவிட அதிகம்.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இரண்டு ஆண்டுகளில் மோசடிகளுக்கு பலியானோர் $1.3 பில்லியனை இழந்துள்ளனர்.
இந்த காலகட்டத்தில் மோசடிகளின் எண்ணிக்கை 32.6% அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

