சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), மாஸ்கோவிலுள்ள அதன் அலுவலகத்தை மூடியுள்ளது. அது மே 15ஆம் தேதி மூடப்பட்டதாக எஸ்ஐஏ பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். எஸ்ஐஏ-யின் பொது விற்பனை முகவரான 'ஏவியரெப்ஸ்', விமான சேவை நிறுவனத்தை ரஷ்யாவில் பிரதிநிதிக்கும் என்றார் அவர். பிப்ரவரி 24ஆம் தேதி, உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த நான்கு நாள்களுக்கு மாஸ்கோ விமானச் சேவையைத் தற்காலிகமாக நிறுத்துவதாக 2022 பிப்ரவரி 28ஆம் தேதி எஸ்ஐஏ அறிவித்திருந்தது.
எஸ்ஐஏ: மாஸ்கோ அலுவலகம் மூடல்
1 mins read
-

