முதல் வரவேற்பு முதல்வருக்கு சிறப்பு

முதல் வரவேற்பு முதல்வருக்கு சிறப்பு

2 mins read
84044b87-7952-4817-aa0f-b28a655b787d
-
multi-img1 of 3

தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்ற பின்­னர் சிங்­கப்­பூ­ருக்கு முதல் அதி­கா­ரத்­துவ வருகை மேற்­கொண்ட திரு மு.க. ஸ்டா­லி­னுக்கு நேற்று மாலை முக­ம­ல­ர்ந்த வர­வேற்பு அளிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ரின் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா சண்­மு­க­மும் இந்த வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­றார். திரு ஸ்டா­லினை வர­வேற்று கர­காட்­டம், மயி­லாட்­டம் மற்­றும் ஒயி­லாட்­டம், சிங்க நட­னம் ஆகி­யன மேள­தா­ளங்­க­ளு­டன் மேடை­யே­றின.

பெருந்­தி­ர­ளான மக்­கள் நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்­த­னர். திரு சண்­மு­கமும் திரு ஸ்டா­லி­னும் தமி­ழர் பாரம்­ப­ரிய உடை­யில் காணப்­பட்­ட­னர்.

திரு ஸ்டாலினை நேரில் காண இளையர்கள் ஆர்வத்துடன் வந்திருந்ததைக் காணமுடிந்தது.

நிகழ்ச்­சி­யில் பேசிய திரு சண்­மு­கம், சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து சென்னை, கோயம்­புத்­தூர் மற்­றும் திருச்­சிக்கு இருப்­ப­து­போல தமிழ்­நாட்­டின் பிற நக­ரங்­க­ளுக்­கும் நேரடி விமான சேவை இருந்­தால் ஏரா­ள­மான மக்­கள் பய­ணம் செய்ய வச­தி­யாக இருக்­கும் என்­றும் இந்த அம்­சம் கவ­னிக்­கப்­பட வேண்­டும் என்­றும் தெரி­வித்­தார்.

"கொவிட்-19 முடிந்த நிலை­யில் இந்­தி­யா­வி­லி­ருந்து கடந்த ஆண்டு ஆறு லட்­சம் பய­ணி­கள் வந்­தி­ருந்­த­னர்.

"இவ்­வாண்­டின் முதல் காலாண்­டி­லேயே இந்­தி­யப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை இரண்டு லட்­சத்­தைத் தாண்­டி­விட்­டது.

"தமிழ்­நாட்­டுக்­கும் சிங்­கப்­பூ­ருக்­கும் இடை­யில் கலா­சார, பண்­பாட்டு உற­வு­கள் சிறப்­பாக இருக்­கும் நிலை­யில் வர்த்­தக உறவு இன்­னும் மேம்­பட வேண்­டும்," என்­றார் திரு சண்­மு­கம்.

முதல்­வ­ரின் வர­வேற்­பில் பங்­கேற்க ஏரா­ள­மா­னோர் ஆர்­வத்­து­டன் வந்­தி­ருந்­த­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரான 41 வயது திரு­வாட்டி இ. சுவப்னா, இளம் தலை­மு­றை­யி­னர் அவ­சி­யம் தமி­ழக-சிங்­கப்­பூர் உறவு குறித்து தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றார்.

"ஸ்டா­லின் மக­னான நடி­கர் உத­ய­நிதி ஸ்டா­லி­னையே அதி­கம் கண்­டுள்­ளோம். தற்­போது திரு ஸ்டா­லின் சிங்­கப்­பூர்­மீது கொண்­டுள்ள மதிப்­பும் மரி­யா­தை­யும் பிர­ம்மிக்­க­வைக்­கிறது," என்­றார் மாணவி அம்­ரிதா.

தொடர்ந்து அதி­வே­க­மாய் நவீ­ன­ம­ய­மா­கும் தமிழ்­நாட்­டில் முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­பு­கள் என்­னென்ன, கூட்­டாண்­மைக்கு வழி­வ­குக்­கும் முயற்­சி­கள் யாவை என்­பன இந்­நி­கழ்­வில் தெளி­வு படுத்­தப்­பட்­டது சிறப்பு என்­றார், தமிழ்ப் பட்­டி­மன்ற கலைக்­க­ழ­கத் தலை­வர் திரு அருமை சந்­தி­ரன்.

60 தமிழ் அமைப்­பு­கள் ஒத்­தி­சை­வு­டன் ஒன்­று­கூ­டி­யதை பாராட்­டிய அவர், நிகழ்வு தமி­ழ­ரின் பண்­பாடு சிங்­கப்­பூ­ரில் தொய்­வின்றி தழைக்க ஊக்­கு­விக்­கும் ஒரு நினை­வூட்­டல் என குறிப்­பிட்­டார்.

தமிழ்­நாட்­டில் தொழில்­துறை எட்­டு­ம­ள­வி­லான வேலை­வாய்ப்­பு­க­ளு­டன் செழிக்­காதா என்­பது 51 வயது திரு ஹரி பாஸ்­க­ரின் ஏக்­கம்.

27 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமிழ்­நாட்­டி­லி­ருந்து அவர் அகன்ற சம­யத்­தில் வேலைத்­துறை நிச்­ச­ய­மற்­ற­தாய் இருந்­தது.

"நீண்ட நெடிய வளர்ச்­சிப் பய­ணத்­தில் உரு­மா­றி­யுள்ள தமி­ழக பணித்­துறை தற்­போ­தைய நவீன மேம்­பா­டு­க­ளு­டன் இணைந்து வள­ர­வேண்­டும்.

"தொழில்­நுட்­பம் அத்­தி­யா­வ­சி­ய­மா­கி­விட்­டது, செயற்கை நுண்­ண­றிவு நம்மை அச்­சு­றுத்­து­கிறது. இதற்­கெல்­லாம் ஈடு­கொ­டுக்க என்ன திட்­டங்­கள் உள்­ளன என அறிந்­து­கொண்­டேன்," என்­றார் அவர்.