தமிழ்நாட்டின் சிறந்த பங்காளியாக சிங்கப்பூர் திகழ ஸ்டாலின் விருப்பம்

தமிழ்நாட்டின் சிறந்த பங்காளியாக சிங்கப்பூர் திகழ ஸ்டாலின் விருப்பம்

2 mins read
70c562a3-4dfc-4832-bdbc-a15e79461fd8
-

சிங்­கப்­பூ­ரின் திறன்­கள் தமிழ்­நாட்­டிற்­குத் தேவைப்­ப­டு­வ­தால் சென்­னை­யில் 2024 ஜன­வ­ரி­யில் நடத்­தப்­பட இருக்­கும் உலக முத­லீட்­டா­ளர் மாநாட்­டில் இங்­குள்ள நிறு­வ­னங்­கள் கலந்­து­கொண்டு முத­லீடு செய்ய முன்­வ­ரு­மாறு சிங்­கப்­பூர் வந்­துள்ள தமிழ்­நாட்டு முதல்­வர் மு.க. ஸ்டா­லின் அழைப்பு விடுத்­தி­ருக்­கி­றார்.

'சிக்கி' எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­திய வர்த்­தக, தொழிற்­ச­பை­யும் 'கைடன்ஸ் இந்­தியா' அமைப்பும் நேற்று ஷங்­ரிலா தமிழ்­நாட்டு முத­லீடு மாநாட்டை நடத்­தின.

சிங்­கப்­பூ­ரை­யும் இந்­தி­யா­வை­யும் சேர்ந்த சுமார் 350 வர்த்­த­கர்­களும் உறுப்­பி­னர்­களும் இதில் பங்­கேற்­ற­னர். திரு ஸ்டா­லின் முன்­னி­லை­யில் ஆறு புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களில் சிங்­கப்­பூர் தரப்­பி­ன­ரும் தமி­ழ­கத் தரப்­பி­ன­ரும் கையெ­ழுத்­திட்­ட­னர்.

"நகர நிர்­வா­கத்­தில் அதி­க­பட்ச தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி, திற­மை­யாக பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்ட சிங்­கப்­பூர், மற்ற நாடு­க­ளுக்கு தர அள­வு­கோல். எங்­கள் தாய்­மொ­ழி­யாம் தமிழ் மொழி ஆட்­சி­மொ­ழி­க­ளுள் ஒன்­றாக இருப்­ப­த­னால் சிங்­கப்­பூரை நாம் வெளி­நா­டாக நினைப்­ப­தில்லை,"

"சிங்­கப்­பூ­ருக்­கும் தமிழ்­நாட்­டுக்­கும் இடையே தொன்­று­தொட்டே சிறப்­பான உறவு நீடிக்­கிறது. சிங்­கப்­பூ­ரின் (அனைத்து) அரசு பள்­ளி­க­ளி­லும் தொடக்­க­நிலை முதல் இள­நிலை கல்­லூரி வரை தமிழ் இரண்­டா­வது மொழி­யா­கக் கற்­பிக்­கப்­ப­டு­கிறது என்­பது தமிழ்ப் பேச்சு எங்­கள் மூச்சு என வாழ்ந்­து­வ­ரும் எங்­க­ளுக்கு தேன்­வந்து பாயுது எந்­தன் காதி­னிலே என்­பது போன்ற இனிய செய்தி," என்று திரு ஸ்டா­லின் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரின் போக்­கு­வ­ரத்து அமைச்­ச­ரும் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான எஸ். ஈஸ்­வ­ரன் கடந்த ஆண்டு சென்னை வந்­தி­ருந்­த­போது தம்மை சந்­தித்­த­தை­யும் திரு ஸ்டா­லின் நினை­வு­கூர்ந்­தார்.

"திரு ஈஸ்­வ­ர­னின் பண்­பினால் மகிழ்ந்­து­போன நான், அடுத்த பய­ண­மாக சிங்­கப்­பூர் செல்­ல­வேண்­டும் என்று திட்­ட­மிட்­டேன். அவ­ரைச் சந்­தித்­த­போது பொரு­ளி­யல் உற­வு­கள், பண்­பாடு மற்­றும் வர்த்­த­கத்­தைப் பற்றி விரி­வா­கப் பேசி­னோம்," என்­றார் அவர்.

அசென்­டாஸ், டிபி­எஸ் வங்கி, சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், ஐஇ சிங்­கப்­பூர் உள்­ளிட்ட கிட்­டத்­தட்ட முப்­பது சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் உள்­பட தமிழ்­நாட்­டில் இருப்­ப­தா­கக் குறிப்­பிட்ட திரு ஸ்டா­லின், தமி­ழ­கத்­தின் மீது அதிக கவ­னம் செலுத்­தும்­படி சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.

"எங்­க­ளது முன்­னேற்­றப் பய­ணங்­களில் இணைந்து அதற்­கான திட்­டங்­க­ளைச் செயல்­படுத்த சிறப்­பான பங்­கா­ளி­யாக சிங்­கப்­பூர் கைகோர்க்க வேண்­டும் என இங்­குள்ள நிறு­வ­னங்­களைக் கேட்­டுக்­கொள்­கி­றோம்," என்­றார் திரு ஸ்டா­லின்.