இளம் சிங்கப்பூரர்கள் அதிகம் பங்களிப்பர்: எட்வின் டோங்

இளம் சிங்கப்பூரர்கள் அதிகம் பங்களிப்பர்: எட்வின் டோங்

1 mins read
ae2fb169-6dce-4de0-a6ff-7de44cb748ce
-

அரசாங்கக் கொள்கைகளை வகுப்பது தொடர்பில் இளையர் குழுக்கள் அமைக்கப்படும்

அர­சாங்­கக் கொள்­கை­களை வகுக்­கை­யில் இளம் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் கருத்­து­கள் அதி­கம் கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­ இ­ருக்­கி­றார்.

குறிப்­பாக இளை­யர்­கள் தொடர்­பான விவ­கா­ரங்­களில் அது முக்­கி­யத்­து­வம் பெறும் என்­றார் அவர்.

அதன் தொடர்­பில் இவ்­வாண்டு இரண்டு அல்­லது மூன்று குழுக்­கள் அமைக்­கப்­படும். கொள்­கை­களை வடி­வமைப்­பது தொடர்­பான பரிந்­துரை­களை அர­சாங்­கத்­து­டன் இணைந்து அவை உரு­வாக்­கும்.

ஒவ்­வொரு குழு­வி­லும் 20 முதல் 30 இளை­யர்­கள் இடம்­பெற்­றி­ருப்­பர். தற்­கால இளை­யர்­கள் எதிர்­கொள்­ளும் விவ­கா­ரங்­கள் தொடர்­பான ஓர் அம்­சம் குறித்து அவர்­கள் கருத்­து­ரைப்­பர்.

அத்­த­கைய அம்­சங்­க­ளை­யும் இளை­யர்­கள் பரிந்­து­ரைக்­க­லாம். அதன் தொடர்­பில் இளை­யர் குழுக்­கள் ஆற்­றும் பணி குறித்து அடுத்த சில மாதங்­களில் அமைச்சு அறி­விக்­கும்.

தேசிய இளை­யர் கலந்­து­ரை­யா­டல் அங்­கத்­தில் அமைச்­சர் டோங் இந்த விவ­ரங்­களை அறி­வித்­தார். ஏறக்­கு­றைய 90 இளை­யர்­கள் அதில் கலந்­து­கொண்­ட­னர். அரசாங்கம் நடத்தும் கலந்துரையாடல்களில் தாங்கள் முன்வைக்கும் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று அவ்விளையர்கள் வலியுறுத்தினர்.

'முன்­னே­றும் சிங்­கப்­பூர்' கருத்­த­றி­யும் திட்­டத்­தின்­கீழ் இளை­யர்­கள் கருத்­து­ரைக்­கக் கூடு­தல் வாய்ப்பு வழங்­கப்­படும்.

"இளை­யர்­கள் கொள்கை வகுப்பு தொடர்­பான சிக்­கல்­களை­யும் அதனை முன்­னிட்டு மேற்­கொள்­ளப்­படும் சம­ர­சங்­களை­யும் புரிந்­து­கொள்ள அது கைகொ­டுக்­கும்," என்­றார் அமைச்­சர்.