'உணவு சேவைத் துறையில் 40 விழுக்காட்டு வேலைகளை மறுவடிவமைப்பது அவசியம்'

'உணவு சேவைத் துறையில் 40 விழுக்காட்டு வேலைகளை மறுவடிவமைப்பது அவசியம்'

2 mins read
8b70b9b3-b637-450f-806b-4b5dad302e39
-

உணவு சேவைத் துறை­யில் பத்­தில் நான்கு வேலை­களை மறு­வடி­வ­மைப்­பது அவ­சி­யம் என்று வர்த்­தக, தொழில் துணை அமைச்­சர் லோ யென் லிங் கூறி இருக்­கி­றார்.

அடுத்த மூன்று ஆண்­டு­களில் அவ்­வாறு செய்­வ­தன் மூலம் சிங்­கப்­பூ­ரர்­களை அத்­துறைக்கு ஈர்ப்­பது சாத்­தி­யம் ஆகும் என்­றார் அவர்.

அத்­து­றை­யில் ஊழி­யர் பற்­றாக்­குறை, தொழில்­நுட்ப மேம்­பாடு ஆகி­யவை தொடர்­பில் தீர்­வு­காண்­ப­தற்கு வேலை­களில் மித­மா­னது முதல் விரி­வான மாற்­றங்­கள் செய்ய வேண்டி இருக்­கும்.

பரி­மா­று­வோர், சமை­ய­லறை உத­வி­யா­ளர், சமை­யற்­கலை வல்­லு­நர் போன்ற வேலை­கள் மறு­வ­டி­வ­மைப்­புக்கு அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ளன.

'சேண்ட்ஸ்' கண்­காட்சி, மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­றும் 'ரெஸ்ட­ராண்ட் ஏஷியா 2023' எனும் கருத்­த­ரங்­கில் உணவு சேவைத் துறைக்­கான வேலை உரு­மாற்­றத் திட்­டத்தை வெளி­யிட்டு துணை அமைச்­சர் பேசி­னார்.

உரு­மாற்­றத் திட்­டத்தை 'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு, சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி, ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு, மனி­த­வள அமைச்சு, தொழில்­முறை நிபு­ணத்­துவ சேவை வழங்­கும் 'எர்ன்ஸ்ட் அண்ட் யங்' நிறு­வ­னம் ஆகி­யவை இணைந்து வரைந்­துள்­ளன.

முத­லா­ளி­களும் ஊழி­யர்­களும் போட்­டித்­தன்­மை­யை­யும் திறன்­க­ளை­யும் மேம்­ப­டுத்­திக்­கொள்­வ­தற்கு உரிய உத்­தி­களை அத்­திட்­டம் பரிந்­து­ரைக்­கிறது.

"உணவு சேவைத் துறைச் சூழல் வளர்ச்சி காண்­கிறது. இந்­நி­லை­யில், நிறு­வ­னங்­களும் ஊழி­யர்­களும் வருங்­கால வேலை­க­ளுக்கு ஏற்­பத் தயார்ப்­படுத்­திக்­கொள்ள உரு­மாற்­றத் திட்­டம் உத­வும்," என்று துணை­அ­மைச்­சர் லோ கூறி­னார்.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிறகு, தெரி­வு­கள் குறித்த வாடிக்­கை­யா­ளர் மனப்­போக்­கில் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது. நீடித்த நிலைத்­தன்மை மிக்க நடை­மு­றை­கள் பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ளது. இவற்­றுக்கு அப்­பால், நிறு­வ­னங்­கள் தொழில்நுட்­பத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் விகி­த­மும் அதி­க­ரித்­துள்­ளது," என்று துணை­ய­மைச்­சர் கூறி­னார்.

"உள்­ளூர் ஊழி­ய­ரணி மூப்­ப­டை­யும் வேளை­யில் வேலை­வாய்ப்பு தொடர்­பி­லான இளை­யர்­க­ளின் இலக்­கு­களும் மாறி­உள்­ளன. இத­னால் ஊழி­யர்­கள் கடு­மை­யான போட்­டியை எதிர்­கொள்ள நேரி­டு­கிறது.

"எனவே, நிறு­வ­னங்­கள் வேலை­களை மறு­வ­டி­வ­மைத்து பகு­தி­நேர ஊழி­யர்­க­ளைப் பணி­யில் ஈடு­ப­டுத்­து­வது உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்து பரி­சீ­லிக்க வேண்­டும்," என்று திரு­வாட்டி லோ கூறி­னார்.

வேலை உரு­மாற்­றத் திட்­டம், உணவு சேவைத் துறை சார்ந்த குறிப்­பி­டத்­தக்க 30 வேலை­களை மதிப்­பீடு செய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

வாடிக்­கை­யா­ளர் அனு­ப­வம், புத்­தாக்­க­மான தொழில்­நுட்­பத் திறன்­கள் போன்ற திறன்­களுக்­கான தேவை அதி­கம் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ள­தாக 'எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர்' அமைப்பு அதன் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.