தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேலையிழந்த திறனாளர்கள்; ஊழியர் சந்தை நெருக்கடிக்கு தீர்வு

3 mins read
f24e7014-0f15-4c9d-9743-f6e5a50a3d67
-

கூகல், மெட்டா உள்­ளிட்ட முன்­னணி தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் நடந்த ஆட்­கு­றைப்பு நட­வ­டிக்­கை­க­ளால் வேலை சந்­தை­களில் பல திற­னா­ளர்­கள் மீண்­டும் கள­மி­றங்­கி­யுள்­ள­னர். அதா­னல் சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணி­யில் நில­விய நெருக்கடிக்கு தீர்வு கிடைத்­துள்­ளது.

வேலைச் சந்­தை­யில் 2001ஆம் ஆண்­டிற்­குப் பிறகு இப்­போ­து­தான் அதிக அள­வில் திற­னா­ளர்­கள் புகுந்­துள்­ள­னர் என்று வேலைக்கு ஆள் எடுக்க உத­வும் ராண்ட்ஸ்­டான்ட் நிறு­வ­னத்­தின் ஆசிய பசி­பிக் தலை­வர் ஜெயா தாஸ் தெரி­வித்­துள்­ளார்.

"தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் இருந்து பலர் வெளி­யேறு­கின்­ற­னர், இதை மற்ற துறை நிறு­வ­னங்­கள் ஒரு சிறு வாய்ப்­பா­கப் பார்க்­கின்­றன.

"ஏனென்­றால் இதற்கு முன்­னர் அவர்­க­ளால் போதிய அளவு சம்­ப­ளம் கொடுத்­தி­ருக்க முடி­யாது அல்­லது தகுந்த ஆட்­கள் கிடைத்­தி­ருக்க மாட்­டார்­கள்,'' என்று அவர் கூறி­னார்.

பல நாள்­க­ளா­கச் சிறந்த திற­னா­ளர்­கள் வேண்டி காத்­தி­ருந்த வளர்ந்­து­வ­ரும் நிறு­வ­னங்­க­ளுக்கு இந்­தச் சூழல் நல்ல வாய்ப்­பாக மாறி­யுள்­ள­தா­க­வும் ஜெயா தாஸ் குறிப்­பிட்­டார்.

பெரிய தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் பணி­பு­ரிந்து ஆட்­குறைப்­புக்கு ஆளான நபர்­களை நிறு­வ­னங்­கள் எடுக்க தீவி­ரம் காட்டி வரு­கின்­ற­ன என்று எஸ்ஜி டெக் அமைப்­பின் தலை­வர் வோங் வை மெங் தெரி­வித்­தார்.

பெரிய நிறு­வ­னங்­களில் இருந்து வரு­ப­வர்­கள் புத்­தாக்­கச் சிந்­த­னை­யு­ட­னும் அதிக பணிச்­சுமை உள்ள வேலை­யி­டங்­களில் சிறப்­பாக செயல்­படும் திற­மை­யும் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்­கள் என்­றும் அவர் கூறி­னார்.

"தற்­போ­துள்ள சூழ­லைப் பயன்­ப­டுத்தி வளர்ந்து வரும் சிறு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களும் சிறந்த ஊழி­யர்­களை ஈர்த்து வரு­கின்­றன. வங்கி, நிதித்­துறை, பொதுத்­து­றை­யில் உள்ள நிறு­வ­னங்­களும் இதை சாத­க­மா­கப் பார்க்­கின்­றன.

"எஸ்ஜி டெக் இந்த ஆண்­டில் 200க்கும் மேற்­பட்ட ஊழி­யர்­களை தொழில்­நுட்­பத் துறை­யில் பணி­ய­மர்த்த திட்­ட­மிட்­டுள்­ளது," என்­றும் திரு வோங் தெரி­வித்­தார்.

மனி­த­வ­ளத் துறை­யில் ஊழி­யர்­க­ளைத் தேடி­வ­ரு­கிறது 'விசி­யர்' என்­னும் பகுப்­பாய்வு நிறு­வ­னம்.

கொவிட்-19 நோய்த்­தொற்று காலத்­தில் நிறு­வ­னங்­கள் தேவைக்கு அதி­க­மாக ஊழி­யர்­களை வேலைக்கு எடுத்­தன. அத­னால் இப்­போது அதி­க­மாக ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டுள்­ள­தாக அந்­நி­று­வ­னத்­தின் ஆசிய பசி­பிக் வட்­டா­ரத் தலை­வர் டெரன்ஸ் யோங் கூறி­னார்.

இது­மோ­ச­மான சூழல் அல்ல. பெரிய நிறு­வ­னங்­க­ளி­டம் போட்டி­போட முடி­யா­மல் சிறந்த ஊழி­யர்­களை எடுக்­கத் தடு­மா­றிய சிறு நிறு­வ­னங்­க­ளுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்­றார் அவர்.

ஓசி­பிசி வங்கி 2025ஆம் ஆண்­டிற்­குள் 1,500 தொழி­நுட்ப ஊழி­யர்­களை எடுக்­க­வுள்­ள­தாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறி­யி­ருந்­தது.

அந்த இலக்கை நோக்கி தற்­போது முன்­னேறி வரு­வ­தாக அந்­நி­று­வ­னத்­தில் தொழில்­நுட்­பத் துறைக்கு தலைமை வகிக்­கும் பிர­வீன் ரெய்னா கூறி­னார்.

நூற்­றுக்­க­ணக்­கான ஊழி­யர்­கள் ஆட்­கு­றைப்பு செய்­யப்­பட்­டா­லும் தரவு வல்­லு­நர்­கள், இயந்­திர கற்­றல் பொறி­யா­ளர்­கள், இணை­யப் பாது­காப்பு நிபு­ணர்­கள், உள்­கட்­ட­மைப்பு வடி­வ­மைப்­பா­ளர்­கள் போன்­ற­ அனு­ப­வம் கொண்­ட­வர்­களுக்கு தட்­டுப்­பாடு நீடிப்­ப­தாக அவர் கூறி­னார்.

யுஓபி வங்­கி­யில் 500க்கும் அதி­க­மான வேலை­கள் நிரப்­பப்­படா­மல் இருப்­ப­தாக அவ்­வங்­கி­யின் மனி­த­வ­ளத்­து­றை­யின் தலை­வர் டீன் டாங் தெரி­வித்­தார்.

தற்­போது நிரப்­பப்­ப­டா­மல் இருக்­கும் பாதிக்­கும் மேற்­பட்ட வேலை­கள் தொழில்­நுட்­பம் சார்ந்த வேலை­கள். தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில் வேலை செய்­த­வர்­கள் நிதித்­து­றை­களில் சேர்ந்தால் அது நிதித்­து­றைக்கு வலுசேர்க்கும் என்­றார் அவர்.

மனி­த­வள அமைச்­சின் தரவு­2022ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் வரை தக­வல் மற்­றும் தொழில்நுட்­பத்­ து­றை­களில் கிட்­டத்­தட்ட 8,200 வேலை­கள் சிங்­கப்­பூ­ரில் உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் 2022ஆம் ஆண்டு ஆட்­கு­றைப்­பிற்­குள்­ளா­கும் உள்­ளூர் ஊழி­யர்­களில் பத்­தில் ஏழு பேருக்கு ஆறு மாதங்­களில் வேறு வேலை­ கி­டைப்­பதா­கத் தர­வு­கள் கூறு­கின்­றன.

அது பெருந்தொற்று காலமான 2021ஆம் ஆண்டைக் காட்­டி­லும் முன்­னேற்­றம் அடைந்­துள்­ளது என்று தெரிவிக்கப்பட்டது.