சிறுவன் காயம்; தற்காலிகமாக மூடப்பட்ட பறவைகள் மகிழ்வன விளையாட்டுத் திடல்

சிறுவன் காயம்; தற்காலிகமாக மூடப்பட்ட பறவைகள் மகிழ்வன விளையாட்டுத் திடல்

2 mins read
6fe659d4-287c-42c3-b6a5-07a06d815b3f
-

மண்­டாய் வன­வி­லங்­குக் காப்­ப­கத்­தில் புதி­தா­கத் திறக்­கப்­பட்­டுள்ள பற­வை­கள் மகிழ்­வ­னத்­தின் நீர் விளை­யாட்­டுத் திடல் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டுள்­ளது.

கடந்த திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் அது மூடப்­பட்­ட­தா­கக் காப்­ப­கத்­தின் பேச்­சா­ளர் கூறி­னார்.

சென்றா வாரம் சனிக்­கி­ழமை 11 வய­துச் சிறு­வன் ஒரு­வன் அங்­குள்ள 'எக் ஸ்பி­ளேஷ்' விளை­யாட்­டுத் திட­லின் சறுக்­குப் பல­கை­யில் விளை­யா­டும்­போது ஏற்­பட்ட விபத்­தில் சிறு­வ­னின் மேல்­தா­டை­யில் உள்ள முன்­பற்­கள் இரண்டு உடைந்­தன.

ஊழி­யர்­கள் அச்­சி­று­வ­னுக்­கும் அவ­னது குடும்­பத்­தா­ருக்­கும் உத­வி­ய­தா­கக் கூறப்­பட்­டது.

மறு­நா­ளும் அவர்­க­ளைத் தொடர்­பு­கொண்டு பேசி­ய­தா­க­வும் தொடர்ந்து அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருப்­ப­தா­க­வும் மண்­டாய் வன­வி­லக்­குக் காப்­ப­கத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

சம்­ப­வம் குறித்து முழு­மை­யான விசா­ரணை நடத்­தும் பொருட்டு விளை­யாட்­டுத் திடல் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டி­ருப்­ப­தாக அவர் சொன்­னார்.

இத்­த­கைய விபத்­து­கள் மீண்­டும் நேரா­மல் தடுப்­ப­தற்கு உரிய மேம்­பாட்­டுப் பணி­கள் குறித்­துப் பரி­சீ­லிக்­கப்­படும். அதற்­கான மறு ஆய்­வில் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது என்­றார் அவர்.

மற்­றொரு சம்­ப­வத்­தில் அந்த விளை­யாட்­டுத் திட­லில் காயம் அடைந்த குழந்­தைக்கு சிகிச்சை அளிக்­கை­யில் தையல் போட நேரிட்­டது என்று அவர் தெரி­வித்­தார்.

அந்த நீர் விளை­யாட்­டுத் திட­லில் நீரில் சறுக்­கிச் செல்­லும் சறுக்­குப் பல­கை­கள், நீர் தெளிப்­பான்­கள், குளங்­கள் போன்­றவை அமைந்­துள்­ளன. பெரி­ய­வர்­க­ளின் கண்­கா­ணிப்­பின்­கீழ் சிறு­வர்­கள் அங்கு விளை­யா­ட­லாம்.

விபத்­தில் பாதிக்­கப்­பட்ட சிறு­வ­னின் குடும்­பத்­தி­னர் முன்­வைத்த கருத்­து­கள் கவ­னத்­தில் கொள்­ளப்­படும் என்று கூறிய காப்­ப­கத்­தின் பேச்­சா­ளர், மற்ற வரு­கை­யா­ளர்­கள் பதி­விட்­டுள்ள கருத்­து­களும் மறு­ஆய்வு செய்­யப்­ப­டு­வ­தா­கக் கூறி­னார்.

விளை­யாட்­டுத் திடல் மீண்­டும் எப்­போது திறக்­கப்­படும் என்று தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

17 ஹெக்­டர் பரப்­ப­ள­வி­லான பற­வை­கள் மகிழ்­வ­னம் இம்­மா­தம் 8ஆம் தேதி அதி­கா­ர­பூர்­வ­மா­கப் பொது­மக்­க­ளுக்­குத் திறந்­து­வி­டப்­பட்­டது.