கைவிடப்பட்ட மீன்பிடி வலையால் அரிய வகை சுறாக்கள் மரணம்

கைவிடப்பட்ட மீன்பிடி வலையால் அரிய வகை சுறாக்கள் மரணம்

1 mins read
ac26a4fc-750e-4c11-ba96-7a88873ae9db
-

செமக்­காவ் தீவில் கைவி­டப்­பட்ட மீன்­பிடி வலை­யில் சிக்கி 14 அரிய வகை சுறா மீன்­கள் உயி­ரி­ழந்­தன. துடுப்­பு­க­ளின் நுனிப்­ப­குதி கறுப்­பா­கக் காணப்­படும் 'பிளேக்­டிப் ரீஃப்' எனும் வகை­யைச் சேர்ந்த அவை அரு­கி­வ­ரும் உயி­ரி­ன­மா­கக் கரு­தப்­படு­பவை.

அத்­தை­கைய மேலும் ஓர் உயி­ரி­ன­மான 'ஹனி­கோம்ப் விப்ரே' எனப்­படும் திருக்கை மீன் ஒன்­றும் வேறு சில கடல்­வாழ் உயி­ரி­னங்­களும் அவ்­வ­லை­யில் சிக்கி மாண்­ட­வற்­றுள் அடங்­கும்.

கைவி­டப்­பட்ட வலை­யின் நீளம் 300 மீட்­டர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

வலை­யில் சிக்­கிய சுறா மீன்­களில் ஒன்று 1 மீட்­டர் நீள­மா­னது என்­றும் மற்­றவை 50 செ.மீ. நீளம் கொண்­டவை என்­றும் கூறப்­பட்­டது.

சிங்­கப்­பூர் தேசி­யப் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­கள் சென்ற ஆண்டு நடத்­திய ஆய்­வில், 25,500க்கு மேற்­பட்ட மீன்­பி­டிக் கரு­வி­களும் அவற்­றின் சிதைந்த பாகங்­களும் இங்கு கைவி­டப்­பட்­டுள்­ளன.

2000ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்­கப்­பூ­ரின் கடற்­க­ரை­கள், சதுப்பு நிலக் காடு­கள் போன்­ற­வற்­றில் கைவி­டப்­பட்­டவை அவை.

அந்த வலை­களில் 1,050க்கு மேற்­பட்ட கடல்­வாழ் உயி­ரி­னங்­கள் சிக்­கின. அவற்­றில் 34 விழுக்­காட்டு உயி­ரி­னங்­கள் மாண்­டு­விட்­ட­தாக ஆய்வு குறிப்­பிட்­டது.

தேசி­யப் பூங்­காக் கழ­கத்­தின் கட்­டுப்­பாட்­டில் இருக்­கும் 12 பகு­தி­களில் மீன்­பிடி வலை­களைப் பயன்­ப­டுத்­தத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் செமக்­காவ் தீவு அவற்­றில் ஒன்று அன்று என்­பதை ஆய்வு சுட்­டி­யது.