அப்பர் புக்கிட் தீமா ரோட்டைக் கடக்க 2026ல் புதிய பாலம்

அப்பர் புக்கிட் தீமா ரோட்டைக் கடக்க 2026ல் புதிய பாலம்

2 mins read
08325ecb-59ac-412e-a81c-b2c4332a03f8
-

புக்கிட் தீமா வனம்-மேற்கு நீர்த்தேக்க வட்டாரத்திற்கிடையே விலங்குகள், மக்கள் கடக்கலாம்

அப்பர் புக்­கிட் தீமா ரோடு குறுக்கே 2026ஆம் ஆண்டு வாக்­கில் புதிய பாலம் கட்­டப்­படும். புக்­கிட் தீமா காட்­டிற்­கும் மேற்கு நீர்த்­தேக்க வட்­டா­ரத்­திற்­கும் இடை­யில் புக்­கிட் தீமா வனப் பகுதி வழி­யாக மக்­களும் வன­வி­லங்­கு­களும் கடந்து சென்­று­வர அந்­தப் பாலம் அனு­ம­திக்­கும்.

அப்­பர் புக்­கிட் தீமா ரோட்டை விலங்­கு­கள் கடந்து செல்­கின்­றன. அப்­படி செல்­லும்­போது அவை வாக­னங்­களில் அடி­பட்டு­வி­டு­கின்­றன என்பதை தேசிய பூங்­காக் கழ­கம் தெரி­வித்து வந்துள்ளது.

இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வு­கா­ணும் வகை­யில் அந்­தச் சுற்­றுச்­சூ­ழல் பாலம் கட்­டப்­ப­டு­கிறது. பசுமை வளங்­களுக்கு இடையே பாது­காப்­பான முறை­யில் விலங்கு­கள் சென்று வர­வும் அவற்­றின் வாழ்­வி­டச் சூழல் விரி­வ­டை­ய­வும் அந்­தப் பாலம் உத­வும்.

தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ நேற்று நடந்த உயி­ரி­யல் பன்­மய விழா­வில் அந்­தப் பாலம் பற்றி அறி­வித்­தார்.

புக்­கிட் தீமா இயற்கை காடு, புக்­கிட் தீமா வனப் பகுதி ஆகிய­வற்­றில் 1,250க்கும் மேற்­பட்ட சிற்­றி­னங்­க­ளைச் சேர்ந்த தாவரங்­களும் 1,800க்கும் மேற்­பட்ட சிற்­றி­னங்­க­ளைச் சேர்ந்த விலங்­கு­களும் வாழ்­கின்­றன என்­பதைத் திரு லீ சுட்­டிக்­காட்­டி­னார்.

புக்­கிட் தீமா வனப் பகு­தியை யும் மத்­திய நீர்த்­தேக்­க வனப் பகு­தி­யை­யும் இணைப்­ப­தில் புக்­கிட் தீமா விரை­வுச்சாலை­யில் உள்ள பாலம் வெற்­றி­க­ர­மான முறை­யில் உதவி வரு­கிறது. அதைத் தொடர்ந்து இப்­போது புதிய பாலம் அமைக்­கப்­ப­டு­கிறது.

புக்­கிட் தீமா விரை­வுச்­சாலை சுற்­றுச்­சூ­ழல் பாலம் 2013ல் கட்டி முடிக்­கப்­பட்­டது. அந்த விரை­வுச்­சாலை பிரிக்­கும் இரண்டு வனப் பகு­தி­க­ளை­யும் அந்­தப் பாலம் இணைக்­கிறது.

அந்­தப் பாலத்தைச் சூழ்ந்­த­படி தாவ­ரங்­கள் அடர்த்­தி­யாக வளர்ந்து இருப்­ப­தால் பல உயி­ரி­னங்­கள் அந்­தப் பாலத்­தில்­கூட உயிர் வாழ்­கின்­றன என்று அமைச்சர் தெரி­வித்­தார்.

பசுமை இடங்­க­ளின் சுற்­றுச்­சூழல் தன்மை பற்­றி­யும் இயற்கை வள இணைப்­பைப் பலப்­ப­டுத்­து­வ­தில் அவற்­றின் பங்கு பற்­றி­யும் சிறந்த முறை­யில் புரிந்­து­கொள்ள உத­வும் வகை­யில் சென்ற ஆண்டு நாட­ளா­விய முயற்சி ஒன்று முடி­வ­டைந்­தது.

அந்த நட­வ­டிக்கை மூலம் தெரி­ய­வந்­தவை, அத்­த­கைய வனப் பகு­தி­க­ளுக்கு இடை­யில் சுற்­றுச்­சூ­ழல் வழி­களை அமைக்க உத­வு­கின்­றன என்­றார் அவர்.