தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து மீண்டு இன்று பணிக்குத் திரும்புகிறார் பிரதமர் லீ

1 mins read
5acd1040-8e12-447c-b474-e4c1de7aa6cd
-

பிர­த­மர் லீ சியன் லூங் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டது கடந்த 22ஆம் தேதி­யன்று உறு­தி­யா­னதை அடுத்து நேற்று அவர் வெளி­யிட்ட ஃபேஸ்புக் பதி­வில் தாம் கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்­டு­விட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­தார். இந்­நி­லை­யில் இன்று முதல் மீண்­டும் பணிக்­குத் திரும்­பு­வ­தாக 71 வயது திரு லீ குறிப்­பிட்­டி­ருந்­தார்.

தென்­னாப்­பி­ரிக்கா, கென்யா, இந்­தோ­னீ­சியா நாடு­கள் உள்­பட பணி நிமித்­த­மாக திரு லீ பல நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டதை அடுத்து அவ­ருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­யானது.

வயது கார­ணத்­தால் அவ­ரின் மருத்­து­வர்­கள் 'பாக்ஸ்­லோ­விட்' மருந்தை அவ­ருக்­குப் பரிந்­துரைத்­த­னர் என்று திரு லீ குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரர்­கள் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசியைத் தவ­றா­மல் போட்­டுக்­கொண்டு வரு­மாறு பிர­த­மர் லீ அறிவுறுத்தியுள்ளார்.