செங்காங் வட்டாரத்தில் நேற்றுக் காலை இரண்டு கார்கள் மோதிக்கொண்டதில் சாலை விளக்கு, போக்குவரத்து விளக்கு, சாலைத் தகவல் பலகை ஆகியவை சேதமடைந்தன. இதற்கிடையே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 46 வயது ஓட்டுநர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரு வாகனங்களின் ஒன்றில் முன் பயணி இருக்கையில் 34 வயது பெண் ஒருவர் மாட்டிக்கொண்ட நிலையில், அவரை விடுவிப்பதற்காக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் மீட்புக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
அவர் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஃபெர்ன்வேல் ஸ்திரிட், ஃபேர்ன்வேல் லிங்க் இடையே உள்ள சாலைச் சந்திப்பில் விபத்து பின்னிரவு 2 மணியளவில் நிகழ்ந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளை நிற கார் ஒன்றும் கறுப்பு நிற கார் ஒன்றும் மோதியதை அடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்களும் ஒரு மருத்துவ வண்டியும் விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டு இருப்பதைக் காட்டும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

