தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாதர் சுகாதார விழிப்புணர்வு: மார்பகப் புற்றுநோய் தொடர்பான புதிய உதவித் திட்டம்

3 mins read
bc261e84-a4ca-410f-aa50-f84b0bed1ecb
-
multi-img1 of 2

அனுஷா செல்­வ­மணி

மார்­ப­கப் புற்­று­நோய் இருப்பதை ஆரம்­ப­கட்டத்தி­லேயே கண்­டறிந்துவிட்டால் சிகிச்சை நாடி நீண்­ட­கா­லம் ஆரோக்­கி­ய­மாக வாழ முடி­யும். இதை வலி­யு­றுத்­தும் வகை­யில் வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றம், 'வட­கி­ழக்­குப் புற்­று­நோய் வீரர்­க­ளுக்கு ஆத­ரவு' எனும் திட்­டத்­தைப் புதி­தாக அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது. இத்திட்டம் மார்­ப­கப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்ள மாத­ருக்கு நிதி ஆத­ர­வும் மன­நல ஆத­ர­வும் வழங்கும்.

மாதர் ஆரோக்­கி­யத்­திற்­கான அனைத்­து­லக தினத்தை முன்­னிட்டு ஏற்­பாடு செய்­யப்­பட்ட 'ஷி மேட்­டர்ஸ்: ஆக்­‌ஷன் ஃபார் வுமன்ஸ் ஹெல்த்' என்ற நிகழ்­வில் இத்­திட்­டம் தொடங்கி வைக்­கப்­பட்­டது.

செங்­காங் சமூக மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வில் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­ச­ரும் சுகா­தார இரண்­டாம் அமைச்­ச­ரு­மான மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு திட்­டத்­தைத் தொடங்­கி­வைத்­தார்.

சிங்­ஹெல்த், சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம் ஆகி­யவை வட­கி­ழக்கு சமூக மேம்­பாட்டு மன்­றத்­து­டன் கைகோர்த்து வட­கிழக்கு வட்­டா­ரத்­தில் வசிக்­கும் வச­தி­கு­றைந்த குடும்­பங்­க­ளைச் சேர்ந்த மாத­ருக்கு இல­வச 'மெமோ­கி­ராம்' பரி­சோ­த­னைச் சேவையை வழங்­க­வுள்­ளன. மார்­ப­கப் புற்­று­நோய் கண்­ட­றி­யப்­பட்­டால் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு $10,000 வரை­யி­லான நிதி உதவி­யும் வழங்­கப்­படும்.

"பெற்­றோர், மனைவி, பரா­மரிப்­பா­ளர், ஊழி­யர் எனப் பல பரி­மா­ணங்­களை எடுக்­கும் ஒரு பெண், தனது சுகா­தா­ரத்தை எவ்­வே­ளை­யி­லும் கவ­னித்­துக்­கொள்ள வேண்­டும். மாதரை அதி­கம் பாதிக்­கும் மார்­ப­கப் புற்று­நோயை எதிர்­கொள்ள ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்த விழிப்­பு­ணர்வு நிகழ்வு பாராட்­டிற்­கு­ரி­யது. மார்­பகப் புற்­று­நோய் மட்­டு­மின்றி இதர புற்­று­நோய்­கள் தொடர்­பான சுகா­தா­ரப் பரி­சோ­த­னை­க­ளைச் செய்­து­கொள்­ள­வும் மாதர் ஊக்கு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த கிட்­டத்­தட்ட 400 குடி­யி­ருப்­பா­ளர்­கள் சுகா­தார நட­வ­டிக்­கை­களில் கலந்து­கொண்­ட­னர். மார்­ப­கப் புற்­று­நோய் பரி­சோ­த­னை­யின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்­தும் வகை­யில் குழுக் கலந்­து­ரை­யாடல் ஒன்­றும் நடை­பெற்­றது. குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு மார்­ப­கப் புற்­று­நோய் சார்ந்த விழிப்­பு­ணர்­வைக் கொண்டு சேர்க்­கும் நோக்­கில் தக­வல் சாவ­டி­களும் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன.

51 ஆண்­டு­க­ளாக சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் மார்­பகம் தொடர்­பான பிரி­வில் தாதி­யா­கப் பணி­பு­ரி­யும் 71 வயது நாக­லிங்­கம் சரஸ்­வதி, "பெண்­கள் எவ்­வாறு தாங்­களே மார்­ப­கத்­தில் கட்டி இருப்­ப­தைப் பரி­சோ­தித்­துக்­கொள்­ள­லாம் என்­பதை சிங்­ஹெல்த் சாவ­டி­யில் இருந்த நானும் என் தொண்­டூ­ழி­யர்­களும் கற்­றுத் தரு­கி­றோம்," என்­றார்.

மெமோ­கி­ராம் பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொண்­ட­வர்­களில் ஒரு­வ­ரான பகு­தி­நேர ஊழி­யர் அப்­துல் காதர் நூர் உல் ஆயிஷா, 52, "நான் 2017ல் எனது முதல் மெமோ­கி­ராம் பரி­சோ­த­னையை மேற்­கொண்­டேன். அதன் பிறகு இன்­று­தான் செய்­கி­றேன். எனது உற­வி­ன­ரும் நண்­ப­ரும் மார்­ப­கப் புற்­று­நோ­யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 40 வய­துக்கு மேற்­பட்ட மாதர் கட்­டா­யம் நோய் வரும் முன் தங்­க­ளைக் காத்­துக்­கொள்ள வேண்­டும். இந்­தத் திட்­டம் என்­னைப் போன்­ற­வர்­க­ளுக்கு பேரு­த­வி­யாக இருக்­கும். இனி இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு முறை மெமோ­கி­ராம் பரி­சோ­த­னைக்­குச் செல்ல முடி­வெ­டுத்­துள்­ளேன்," என்­றார்.

பொது­மக்­க­ளுக்கு ஆரோக்­கிய வாழ்க்­கை­மு­றை­யைப் பின்­பற்­றும் அவ­சி­யத்­தைக் கொண்டு சேர்க்­கும் வித­மாக இந்­திய முஸ்­லிம் சமூக சேவை சங்­க­மும் நிகழ்­வில் பங்­கேற்­றது. அதன் வட­கி­ழக்­குப் பிரி­வின் தலை­வ­ரான இம்­ரானா பானு, 37, "நாங்­கள் ஆரோக்­கி­யத்­தின் அவ­சி­யத்­தைப் பறை­சாற்­றும் வித­மாக 12 மாதத் திட்­டம் ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­துள்­ளோம். அதன் தொடக்க நாளா­க­வும் இன்று அமைந்­துள்­ளது," என்று பகிர்ந்­தார்.