தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சுங்க, வரி ஏய்ப்பு தொடர்பில் பிடிபட்ட விமானப் பயணிகளுக்கு அபராதம்

2 mins read
9a24794a-9c82-412f-a431-7c6671d9f7e3
-

சிங்­கப்­பூர் சுங்­கத் துறை, குடி­நுழைவு, சோத­னைச் சாவ­டி­கள் ஆணை­யம் ஆகி­ய­வற்­றின் அதி­கா­ரி­கள் சாங்கி விமான நிலை­யத்­தில் மேற்­கொண்ட அம­லாக்க நட­வ­டிக்­கை­யில் சுங்க, வரி ஏய்ப்பு செய்த 115 பய­ணி­கள் பிடி­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 15ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அந்­தக் கூட்டு அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­டது.

ஆடம்­பர கைப்­பை­கள், சிக­ரெட்­டு­கள், புகை­யி­லைப் பொருள்­கள், சுங்க வரி விலக்கு அளிக்­கப்­பட்ட அள­விற்கு அதி­க­மான மது­பா­னங்­கள், பொருள், சேவை வரி செலுத்த வேண்­டிய பொருள்­கள் ஆகி­யவை பிடி­பட்­டன.

அவற்­றின் மூலம் ஏய்க்­கப்­பட்ட வரி­க­ளின் மதிப்பு $18,491 என்று கூறப்­பட்­டது.

பிடி­பட்­டோ­ருக்கு மொத்­தம் $28,000 அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

சிங்­கப்­பூர் ஆட­வர் ஒரு­வர் ஐந்து ஆடம்­ப­ரக் கைப்­பை­க­ளு­டன் பிடி­பட்­டார்.

வெளிநாட்­டில் அவ­ரும் அவ­ரது காத­லி­யும் வாங்­கிய அப்­பை­க­ளின் மதிப்பு $13,825. அவற்­றுக்­குச் செலுத்­தப்­ப­ட­வேண்­டிய பொருள், சேவை வரி $1,106ஐ ஆட­வர் ஏமாற்ற முயன்­றார்.

சிங்­கப்­பூர் மாது ஒரு­வர் ஆடம்­ப­ரக் கைக்­க­டி­கா­ரத்­து­ட­னும் ஆடம்­ப­ரக் கைப்­பை­யு­ட­னும் பிடி­பட்­டார். மொத்­தம் $5,637 மதிப்­பி­லான அவற்­றுக்கு அவர் செலுத்­த­வேண்­டிய பொருள், சேவை வரி $450.96.

பிறந்­த­நாள் பரி­சுப் பொட்­ட­ல உறைக்குள் ஆறு பொட்­ட­லங்­கள் கள்ள சிக­ரெட்­டு­க­ளை மறைத்துக் கொண்டுவந்த வெளி­நாட்டு ஆட­வர் ஒரு­வர் பிடி­பட்­டார்.

வேலை அனு­மதி அட்டை வைத்­துள்ள வெளி­நாட்டு ஆட­வர் 'கஸ்­டம்ஸ்@எஸ்ஜி' செயலி வழி­யாக விஸ்கி போத்­தல் குறித்­துத் தவ­றான தக­வல் அளித்­தது கண்டு­பி­டிக்­கப்­பட்­டது. அதன்­மூலம் $15.14 சுங்க வரி­யைத் தவிர்ப்­பது அவ­ரது நோக்­கம்.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் அனைத்­துப் பய­ணி­களும் வரி செலுத்த வேண்­டிய பொருள்­கள் குறித்து துல்­லி­ய­மான, முழு­மை­யான தக­வல்­களை அளிக்க வேண்­டி­யது அவர்­க­ளின் பொறுப்பு என்று சிங்­கப்­பூர் சுங்­கத் துறை கூறி­யது.

"வரி ஏய்ப்பு செய்­வது குற்­ற­மா­கும். அவ்­வாறு செய்­யும் பய­ணி­கள் கூடு­த­லான அப­ரா­தத் தொகையை செலுத்த நேரி­டும்," என்று அது எச்­ச­ரித்­தது.

சுங்­க­வ­ரிச் சட்­டத்­தின்­கீழ் வரி ஏய்ப்பு செய்ததோ செய்ய முயன்றதோ நிரூ­பிக்­கப்­பட்­டால், ஏய்க்­கப்­பட்ட வரி­யைப்­போல 20 மடங்­குத் தொகையை அப­ரா­த­மா­கச் செலுத்த நேரி­டும்.

அல்­லது ஈராண்டு வரை­யி­லான சிறைத்­தண்­டனை விதிக்­கப்­படும்.