பழுதான 'ஐஃபோன்'கள் கையாடல்: ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

பழுதான 'ஐஃபோன்'கள் கையாடல்: ஆடவர் குற்றவாளி எனத் தீர்ப்பு

1 mins read
0eecc633-fb3c-4043-bb66-537ae0011ac9
-

'பிகட்­ரான் சர்­விஸ் சிங்­கப்­பூர்' எனும் நிறு­வ­னத்­தில் பணி­யாற்­றிய லிம் ஜென் ஹீ எனும் ஆட­வர் (படம்), பழு­தான 25,000 'ஐஃபோன்'களைக் கையா­டி­ய­தா­கத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

அத­னால் நிறு­வ­னத்­திற்கு $6.76 மில்­லி­யன் இழப்பு ஏற்­பட்­டது. நிறு­வ­னம் சிங்­கப்­பூ­ரி­லும் மற்ற ஆசிய நாடு­க­ளி­லும் 'ஐஃபோன்' பழுது நீக்­கும் சேவையை வழங்கி வந்­தது.

அதில் உதவி மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றிய மலே­சி­ய­ரான 51 வயது லிம், தள­வாட மேலா­ள­ரான இங் ஷு கியான் எனும் மாது­டன் சேர்ந்து அவ்­வாறு கையா­டல் செய்­தார்.

2018ஆம் ஆண்டு ஜன­வரி 31ஆம் தேதிக்­கும் 2019ஆம் ஆண்டு மே 15ஆம் தேதிக்­கும் இடை­யில் கையா­டல் நடந்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. பழுது பார்த்த 'ஐஃபோன்­களை' மலே­சி­யா­வில் விற்று லிம், இங் இரு­வ­ரும் லாபத்­தைப் பிரித்­துக்­கொண்­ட­னர்.

ஆப்­பிள் நிறு­வ­னத் தணிக்­கை­யா­ளர்­கள் நடத்­திய திடீர்ச் சோத­னை­யில் 'ஐஃபோன்­கள்' காணா­மற்­போ­னது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

கையா­டல் மூலம் லிம் $3 மி. ஈட்­டி­ய­தா­க­வும் இங் $3.1 மில்­லி­ய­னுக்­கு­மேல் ஈட்­டி­ய­தா­க­வும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இங் தன்­மீது சுமத்­தப்­பட்ட நம்­பிக்கை மோச­டிக் குற்­றச்­சாட்­டு­கள் இரண்­டை­யும் ஒப்­புக்­கொண்­டதை அடுத்து 2021ல் அவ­ருக்கு ஒன்­பது ஆண்­டுச் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

லிம்மிற்கு ஜூலை மாதம் தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.