தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலர்பள்ளி மாணவர்களுக்கு குடல் அழற்சி; அறுவர் மருத்துவமனையில்

1 mins read
03bf8bda-715f-4190-8dbf-08926fa1c0fd
-

தங்­ளின், சாங்கி விமான நிலை­யம், பீஷான் ஆகிய இடங்­களில் உள்ள மைண்ட் சாம்ஸ் பாலர் பள்­ளி­களில் நான்கு குழந்­தை­கள் குடல் அழற்­சி­யால் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

'நோஷ் குயி­சின்' எனும் உணவு தயா­ரிக்­கும் நிறு­வ­னத்­தின் உணவை மே 17ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை உட்­கொண்ட 79 பிள்­ளை­கள், 10 ஊழி­யர்­கள் என மொத்­தம் 89 பேர் இச்­சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று சுகா­தார அமைச்சு, சிங்­கப்­பூர் உணவு அமைப்பு, ஆரம்­ப­கால பாலர்­பருவ மேம்­பாட்டு அமைப்பு ஆகி­யவை நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டோ­ரின் நிலைமை சீராக உள்ளது. பாதிக்­கப்­பட்ட மற்ற சிலர் வெளி­நோ­யாளி சிகிச்சை, சுய­ம­ருத்­து­வம் பெற்­றுக்­கொண்­ட­னர். சிலர் சிகிச்சை ஏது­மின்றி குண­ம­டைந்­துள்­ள­னர் என்று அந்த அமைப்­பு­கள் கூறின.

தங்­ளின் பாலர்­பள்­ளி­யில் 45 பிள்­ளை­களும் ஐந்து ஆசி­ரி­யர்­களும் சாங்கி விமான நிலையப் பாலர்­பள்­ளி­யில் 28 பிள்­ளை­களும் ஐந்து ஊழி­யர்­களும் பீஷான் பள்­ளி­யில் ஆறு பிள்­ளை­களும் பாதிக்­கப்­பட்­ட­னர்.

'நோஷ் குயி­சின்' உணவு வர்த்­த­கம் நேற்று முதல் அடுத்த அறி­விப்பு வரும்­வரை தடை செய்­யப்­பட்­டுள்­ளது. அந்­நிறு­வ­னம் தனது இடங்­க­ளைச் சுத்­தப்­ப­டுத்தி, கிரு­மி­நா­சினி தெளித்து, அது பயன்­ப­டுத்­தும் தட்­டு­கள், சமை­யல் உப­க­ர­ணங்­கள் ஆகி­ய­வற்­றைச் சுத்­தப்­படுத்த வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

அந்­நி­று­வ­னத்­தின் உணவு தயா­ரிப்பு ஊழி­யர்­களும் நிய­மிக்­கப்­பட்ட உண­வுச் சுகா­தார அதி­கா­ரி­யும் வேலைக்குத் திரும்புதற்கு முன் உண­வுப் பாது­காப்­புப் பயிற்­சிக்கு மீண்­டும் செல்ல வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.