தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கூட்டுரிமை வீடுகள் மறுவிற்பனை 17.9% சரிவு

2 mins read
ba35b90e-fa70-4825-94ad-78cd83e69b47
-

இவ்­வாண்டு ஏப்­ரல் மாதத்­தில் மறு­விற்­பனை மூலம் குறை­வான கூட்­டு­ரிமை வீடு­களே கைமா­றி­ய­தாக 99.co மற்­றும் எஸ்­ஆர்­எக்ஸ் சொத்­துச் சந்தை நிறு­வ­னங்­களின் முன்­னோடி மதிப்­பீடு­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த ஏப்­ரல் மாதத்­தில் 919 கூட்­டு­ரிமை வீடு­கள் மறு­விற்­பனை செய்­யப்­பட்­டன. இது, அதற்கு முந்­திய மார்ச் மாதத்­தைக் காட்­டி­லும் 17.9 விழுக்­காடு குறைவு. மார்ச்­சில் 1,119 கூட்­டு­ரிமை வீடு­கள் கைமா­றின.

அதே நேரத்­தில், ஏப்­ரல் மாதத்­தில் கூட்­டு­ரிமை மறு­விற்­பனை வீடு­க­ளின் விலை 1.2 விழுக்­காடு உயர்ந்­தது. இந்த விலை­யேற்­றம் மத்­திய சிங்­கப்­பூ­ரில் 2.3 விழுக்­கா­டா­க­வும் நக­ரோ­ரப் பகு­தி­களில் 1.7 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

மாறாக, புற­ந­கர்ப் பகு­தி­களில் கூட்­டு­ரிமை வீடு­க­ளின் மறு­விற்­பனை விலை 0.3 விழுக்­காடு குறைந்­தது.

ஆண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, கூட்­டு­ரிமை வீடு­களின் மறு­விற்­பனை விலை 8.7 விழுக்­காடு உயர்­வு­கண்­டது.

புதிய தனி­யார் வீடு­கள் விற்­பனைக்கு விடப்­பட்­ட­தும் கடன்­பெ­று­வ­தற்­கான அதி­கக் கட்­ட­ண­மும் மறு­விற்­ப­னைக்கு வந்த கூட்­டு­ரிமை வீடு­க­ளின் எண்­ணிக்கை குறை­வாக இருந்­த­துமே மறு­விற்­பனை சரி­விற்கான கார­ணங்கள் என்று சொத்­துச் சந்­தைப் பகுப்­பாய்­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நிச்­ச­ய­மில்­லாப் பொரு­ளி­யல் சூழ­லால் வரும் மாதங்­க­ளி­லும் இந்­தச் சரிவு தொட­ரும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இத­னி­டையே, சென்ற ஏப்­ர­லில் தனி­யார் வீடு­கள் விற்­பனை 80.3 விழுக்­காடு அதி­க­ரித்து, 887 வீடு­கள் விற்­ப­னை­யா­யின. தனி­யார் வீட்டு விற்­ப­னை­யைப் பொறுத்­த­மட்­டில், இதுவே ஆக அதி­கம் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­னார் 'இஆர்ஏ ரியால்டி நெட்­வொர்க்' நிறு­வ­னத்­தின் நிர்­வாக அதி­காரி யூஜின் லிம்.

வாட­கைச் சந்தை நில­வ­ரம் நன்­றாக இருப்­ப­தா­லும் கூட்­டு­ரிமை வீட்டு உரி­மை­யா­ளர்­கள் சிலர் தங்­க­ளது வீடு­களை விற்­கா­மல் வாட­கைக்கு விட முடிவு செய்­துள்­ள­தாக திரு­வாட்டி வோங் குறிப்­பிட்­டார்.

சென்ற ஏப்­ரல் மாதம் தங்ளின்/ஹாலந்து வட்­டா­ரத்­தில் உள்ள 'ஸ்கல்ப்­சுரா ஏர்ட்­மோர்' கூட்­டு­ரி­மைக் குடி­யி­ருப்­புத் தொகு­தி­யில் உள்ள ஒரு கூட்­டு­ரிமை ஆக அதி­க­மாக $18 மில்­லி­ய­னுக்­குக் கைமா­றி­யது.

முன்னதாக, கூடு­தல் முத்­திரை வரி உயர்வு கடந்த ஏப்­ரல் 27ஆம் தேதி­யன்று நடப்­பிற்கு வந்­தது. அதன்­படி, வெளி­நாட்டினர் இங்கு வீடு வாங்­கும்­போது முத்­திரை வரி­யாக 60% செலுத்த வேண்­டும். முன்­னர் இவ்­வி­கி­தம் 30 விழுக்­கா­டாக இருந்­தது.