சிங்கப்பூரில் இவ்வாண்டு இதுவரை 15 பேர் ஸிக்கா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுவிட்டனர். அதிலும் இம்மாதத்தில் மட்டும் 14 பேரை அக்கிருமி தொற்றிவிட்டது.
மே 7 முதல் 13ஆம் தேதி வரையிலான வாரத்தில் இருவர் ஸிக்கா தொற்றால் பாதிக்கப் பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளம் தெரிவித்தது.
அதற்கடுத்த இரண்டு வாரங்களிலும் தலா ஐவர் அத்தொற்றுக்கு ஆளாகினர்.
கோவன் வட்டாரத்தில் உள்ள ஒரு ஸிக்கா தொற்றுக் குழுமத்தில் மட்டும் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துவிட்டது.
டெங்கி, சிக்குன்குன்யா கிருமிகளைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்களே ஸிக்கா கிருமியையும் பரப்புகின்றன.
ஸிக்கா தொற்றால் பாதிக்கப்படுவோரிடம் மூன்று முதல் 14 நாள்களுக்குக் காய்ச்சல், சொறி, மூட்டுவலி போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
கடந்த 2020 மார்ச் மாதத்தில் இருந்து சிங்கப்பூரில் ஸிக்கா தலைகாட்டாத நிலையில், சென்ற ஆண்டு அத்தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டதாகப் பதிவானது.
கோவன் பகுதியில் ஸிக்கா தொற்றுக் குழுமம் உருவாகி இருப்பதாக இம்மாதம் 12ஆம் தேதி சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் அறிவித்தன.