பொஃப்மா ஆணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

பொஃப்மா ஆணையை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி

1 mins read
ee0b72b9-00e9-41d4-a760-26bf3ba14043
-

இணை­ய­வழி பொய்ச்செய்­திக்­கும் சூழ்ச்­சித்திறத்­திற்­கும் எதி­ரான சட்­டத்­தின்­கீழ் (பொஃப்மா) பிறப்­பிக்­கப்­பட்ட திருத்த ஆணையை ரத்து செய்­யக் கோரி 'டிரான்ஸ்­ஃபர்­மேட்­டிவ் ஜஸ்­டிஸ் கலெக்­டிவ்' குழு தாக்­கல் செய்த மனு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

தொடர்பு, தக­வல் அமைச்­சரும் உள்­துறை இரண்­டாம் அமைச்­ச­ரு­மான ஜோச­ஃபின் டியோ அம்­ம­னு­வைத் தள்­ளு­படி செய்­த­தாக உள்­துறை அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

போதைப்­பொ­ருள் குற்­றத்­திற்­காக 46 வய­தான தங்­க­ராஜு சுப்­பை­யா­விற்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது தொடர்­பில் கடந்த ஏப்­ரல் 23ஆம் தேதி அக்­குழு ஃபேஸ்புக் பதிவு வழி­யா­கப் பொய்­யான தக­வல்­களை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

அத­னைத் தொடர்ந்து, அப்­ப­தி­விற்­கு­மேல் திருத்த அறி­விப்பு ஒன்றை வெளி­யிட வேண்­டும் என்று இம்­மா­தம் 19ஆம் தேதி பொஃப்மா சட்­டத்­தின்­கீழ் ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது. உண்­மைக்கு மாறான தக­வல் இடம்­பெற்­றுள்­ளது என்­றும் சரி­யான கட்­டு­ரைக்­கான இணைப்பை அது உள்­ள­டக்கி இருக்க வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

மேலும், அந்­தத் திருத்த அறி­விப்பு தொடர்­பில் அக்­குழு ஒரு புதிய ஃபேஸ்புக் பதிவை வெளி­யிட வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.