சண்முகம்: மத்திய கிழக்கில் சீனாவின் கை ஓங்குகிறது

சண்முகம்: மத்திய கிழக்கில் சீனாவின் கை ஓங்குகிறது

2 mins read
9d9a2471-3b7c-4e24-85e7-994ad06de6b2
-

சீனா­வும் மத்­திய கிழக்கு நாடு­களும் பொரு­ளி­யல் மற்­றும் வர்த்­த­கத் தொடர்­பு­கள் மூலம் நெருங்கி வரும் வேளை­யில் வளை­குடா நாடு­கள் பாது­காப்­புப் போன்ற கூடு­தல் உற­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் கவ­னம் செலுத்து­வது இயல்பே என்று சட்ட, உள்­துறை அமைச்­சர் கா.சண்­முகம் (படம்) தெரி­வித்துள்­ளார்.

"வட்­டா­ரப் பாது­காப்பு என்று வரும்­போது இன்­றைய கால­கட்­டத்­தில் அமெ­ரிக்­கா­வுக்கு நிக­ராக வேறெந்த நாடும் இல்லை என்­பதை மத்­திய கிழக்கு நாடு­கள்­கூட ஒப்­புக்­கொள்­கின்­றன. இதற்கு முன்­னர் இருந்­த­தைப்­போல அமெ­ரிக்கா ஒரு நம்­பிக்­கைக்­கு­ரிய பாது­காப்­புப் பங்­கா­ளியா என்­ப­தில் உறுதி இல்­லாத நிலை­யி­லும் அந்த நாடு­கள் இக்­க­ருத்­தைக் கொண்­டுள்­ளன," என்­றார் அவர்.

அமெ­ரிக்­கா­வின் உள்நாட்டு நில­வ­ரம் மாறி இருப்­ப­தைக் குறிப்­பிட்­டுப் பேசிய திரு சண்­மு­கம், "பாது­காப்பு வழங்­கக்­கூ­டிய நாடு அமெ­ரிக்கா என்­பது நமக்­குத் தெரி­யும். ஆனால், ஏதே­னும் நிகழ்ந்­தால் அது நமக்­குத் தோள் கொடுக்­குமா என்­ப­தில் உறுதி இல்­லா­த­பட்­சத்­தில் மாற்று அம்­சங்­க­ளையே நாட­வேண்டி இருக்­கும்," என்­றார்.

மத்­திய கிழக்கு கல்­விக்­ கழகத்­தின் வரு­டாந்­திர மாநாடு நேற்று ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் நடை­பெற்­றது. மாநாட்­டின் ஒரு நிகழ்­வாக நடை­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்று திரு சண்­மு­கம் பேசி­னார்.

"மத்­திய கிழக்­கில் இடம்­பெற்று உள்ள நாடு­கள் தங்­க­ளது வட்­டா­ரச் சூழலை வடி­வ­மைக்க பிற நாடு­கள் உத­வு­கின்­றன.

"உதா­ர­ணத்­திற்கு, சவூதி அரே­பி­யா­வுக்­கும் ஈரா­னுக்­கும் இடை­யி­லான அர­ச­தந்­திர உற­வு­களை மீட்க சீனா பணி­யாற்­றி­யது. இதன் பின்­ன­ணி­யில் ஓமான் முக்­கிய பங்கு வகித்து, அமை­தி­யா­கப் பணி­யாற்­றி­யது.

"அமெ­ரிக்­கா­வாக இருந்­தா­லும் சீனா, ரஷ்யா அல்­லது ஐரோப்­பிய நாடு­க­ளாக இருந்­தா­லும் வல்­ல­ரசு என்­கிற கோணத்­தில் மத்­திய கிழக்கு நாடு­கள் பார்ப்­பதில்லை.

"சிங்­கப்­பூர் போன்ற எந்த ஒரு நாடும் தேசிய நலன் அடிப்­ப­டை­யி­லேயே உற­வைத் தீர்­மா­னிக்­கும்.

"அதா­வது, அமெ­ரிக்­கா­வு­ட­னேயே இருக்­க­லாமா அல்­லது சற்று மாறு­பட்டு சிந்­திக்­க­லாமா என்­பதே அது," என்று திரு சண்­மு­கம் விளக்­கி­னார்.

கலந்­து­ரை­யா­டலை நடத்­திய கல்­விக்­க­ழ­கத்­தின் தலை­வர் பில­ஹரி கெள­சி­கன், அமெ­ரிக்க-சீன விரோ­தப்­போக்­கில் மாற்­றம் நிகழ்வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

மத்­திய கிழக்கு நாடு­கள் பல­வ­ழி­களில் மாற்று முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­வ­தா­க­வும் அமெ­ரிக்­காவை மட்­டும் நம்­பி­யி­ரா­மல் இன்­னும் அதி­க­மான பன்­னாட்டு அணு­கு­மு­றை­யைப் பின்­பற்ற முடி­வெ­டுத்­தி­ருப்­பது அந்த முயற்­சி­களில் ஒன்று என்­றும் அவர் தெரி­வித்­தார்.

"அமெ­ரிக்­கா­வு­ட­னான உறவு நீடிக்­கும் வேளை­யில் மத்­திய கிழக்கு நாடு­கள் ரஷ்­யா­வு­ட­னும் சாமர்த்­தி­ய­மான உற­வைப் பேணு­கின்­றன. அதே­நே­ரம் சீனா­வு­ட­னும் புதி­தாக உறவை அவை ஏற்­ப­டுத்தி உள்­ளன," என்­றார் திரு கெள­சி­கன்.