சாப்பிட்ட பின் தட்டுகளை உரிய இடத்தில் வைக்கத் தவறினால் கடும் நடவடிக்கை

3 mins read
79c0a966-8a03-4703-bd1b-77f5f4c8fac7
இன்று முதல் உணவு அங்­காடி நிலை­யங்­களில், காப்­பிக் கடை­களில் உணவு அருந்தச் செல்வோர் சாப்­பிட்ட பின் தங்கள் உண­வுத் தட்­டு­களை அவற்­றுக்கு உரிய இடத்­தில் வைத்­து­விட வேண்­டும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இன்று முதல் உணவு அங்­காடி நிலை­யங்­களில், காப்­பிக் கடை­களில் உணவு அருந்தச் செல்வோர் சாப்­பிட்ட பின் தங்கள் உண­வுத் தட்­டு­களை அவற்­றுக்கு உரிய இடத்­தில் வைத்­து­விட வேண்­டும்.

அத்­து­டன், சாப்­பிட்ட மிச்­சம் மீதி, மெல்லிழைத் தாள்­கள் போன்­வற்­றை­யும் அவர்­கள் அப்­பு­றப்­ப­டுத்தி விட­வேண்­டும்.

இவற்றை செய்­யத் தவ­றி­னால் கடும் நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­ப்­படும் என்று தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் நேற்று அறி­வித்­தது.

இதில் முதல் முறை தவறு செய்­வோ­ருக்கு எச்­ச­ரிக்கை கடி­தம் கொடுக்­கப்­படும். மீண்­டும் மீண்­டும் தவறு செய்­வோர் மீது சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என்­றும் வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், முதி­யோர், செயல் திறன் இழந்த உடல் நலி­வுற்­றோர் போன்­ற­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­பட மாட்­டாது. மாறாக, அவர்­க­ளு­டன் சேர்ந்து உணவு அருந்த வரு­வோர் அவர்­க­ளுக்கு உதவி செய்ய வேண்­டும் என்­றும் வாரி­யம் கூறி­யுள்­ளது.

உணவு அங்­காடி நிலை­யங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­கள், சாப்­பிட்­ட­வர்­க­ளின் தட்­டு­களை உரிய இடத்­தில் வைக்க, சாப்­பிட்ட மிச்­சத்தை சுத்­தம் செய்ய உத­வி­னால் அவர்­க­ளின் சேவையை உணவு உண்­ட­வர்­கள் பயன்­ப­டுத்­திக் கொள்­வ­தில் தவ­றில்லை என்­றும் வாரி­யம் அறி­வு­றுத்­து­கிறது.

இதில் அங்­காடி நிலை துப்­பு­ரவு ஊழி­யர்­கள், அவர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும் குத்­த­கைக்­கா­ரர்­கள் ஆகி­யோ­ரி­டம் அங்­காடி நிலை­யத்­தில உணவு அருந்­தும் வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பொறுப்பு குறித்து அவர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்டு இருப்­ப­தை­யும் வாரி­யம் சுட்­டி­யது.

எனவே, வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் பொறுப்பை உணர்ந்து உணவுத் தட்­டு­களை உரிய இடத்­தில் வைக்­க­வும் சாப்­பிட்ட இடத்தை சுத்­த­மாக வைத்­தி­ருக்­க­வும் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வ­தா­க­ வாரி­யம் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

சில சந்­தர்ப்­பங்­களில் வாடிக்­கை­யா­ளர் ஒரு­வர் தான் சாப்­பிட்ட தட்டை, மிச்ச உணவை அப்­பு­றப்­ப­டுத்­தா­மல் போக­லாம். அது­போன்ற சந்­தர்ப்­பங்­களில் முந்­தைய வாடிக்­கை­யா­ளர் விட்­டுச் சென்ற தட்டை புதி­தாக உணவு உண்ண வரு­ப­வர் அப்­பு­றப்ப­டுத்த வேண்­டி­ய­தில்லை.

அதைச் செய்ய உணவு அங்­காடி நிலைய அல்­லது காப்­பிக் கடை ஊழி­யர்­கள் செய்­வர் என்று வாரி­யம் தெளி­வு­ப­டுத்­தி­யது.

உணவு அங்­காடி நிலை­யங்­கள், காப்­பிக் கடை­க­ளுக்கு சோதனை செய்ய வரும் அம­லாக்க அதி­கா­ரி­கள் ஒரு­வ­ரின் விவ­ரங்­க­ளைக் கேட்­பர்.

இதில் அவர்களிடம் சிங்­பாஸ் செயலி உட்­பட எந்­த­வி­த­மான புகைப்­பட அடை­யா­ள­த்தையும் காட்டலாம்.

அப்­படி ஒரு­வர் சோத­னை­யின்­போது விவ­ரங்­க­ளைக் கைவ­சம் வைத்­தி­ருக்­க­வில்லை எனில் அம­லாக்க அதி­காரி சம்­பந்­தப்­பட்ட நப­ரின் அடை­யா­ளத்தை உறுதிசெய்­யும் பொருட்டு காவல் துறை­யின் உத­வியை நாடு­வார் என்று வாரியம் கூறுகிறது.

சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு­வர் தான் உணவு உண்ட மேசை­யி­லி­ருந்து குடிக்க பானம் வாங்கச் செல்­வார்.

அப்­பொ­ழுது அந்த நபர் பானம் வாங்­கி­ய­பின் திரும்ப வந்து மேசை­யி­லுள்ள தட்டு, மற்ற பொருள்­களை அகற்­ற­லாம் என்ற எண்­ணத்­து­டன் இருந்­தி­ருக்­க­லாம்.

இந்­நி­லை­யில், அவரை அம­லாக்க அதி­காரி சாப்­பிட்ட இடத்தை துப்­பு­ர­வாக வைத்­தி­ருக்­க­வில்லை என்று குற்­றம் சுமத்­தி­னால் என்ன செய்­வது என்ற கேள்வி எழ­லாம்.

இதில் அந்த நபர் பானம் வாங்­கு­வ­தற்­கா­கச் சென்­றுள்­ளார் என்­றும் அவர் திரும்ப வந்து சுத்­தம் செய்­யும் எண்­ணத்­தில் இருந்­தார் என்­றும் அந்த அதிகாரிக்குத் தெரி­ய­வந்­தால், அவரை அந்த அதி­காரி மேசையை விட்­டுச்செல்­லும் முன் ­சுத்­தம் செய்­து­விட்­டுச் செல்­லச் சொல்­வார்.

அவர் மீது எவ்­வித நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்படாது என்று வாரி­யம் கூறி­யுள்­ளது.சில சந்தர்ப்பங்களில், தட்­டு­களை திரும்ப வைக்­கும் இடம் நிரம்­பி­யி­ருக்­கலாம்.

அதுபோன்ற சந்தர்ப்பங்களில் அங்கு ஒரு­வர் தட்டை வைக்க முடி­யாத நிலையில், அவர் தனது தட்டை அருகிலேயே வைத்தால் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாது என்றும் வாரி­யம் தெரி­வித்­துள்­ளது.