$40 மி. நிதி மோசடி: ஆடவருக்கு 13 ஆண்டுகளுக்குமேல் சிறை

2 mins read
5fd1e4c8-dcf0-4528-bc4b-ce91d5cd54a6
-

கிட்­டத்­தட்ட $40 மில்­லி­யன் அர­சாங்க நிதி­யைக் கையா­டல் செய்ய கும்­பல் ஒன்­றுக்கு உத­விய ஆட­வ­ருக்கு 13 ஆண்­டு­கள் 9 மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இது­வரை நடந்­த­வற்றில் ஆகப் பெரிய அர­சாங்க நிதி மோசடி இது என்று அர­சுத்­த­ரப்பு வழக்­க­றி­ஞர் குறிப்­பிட்­டார்.

டேவிட் லிம் வீ ஹொங், 44, என்ற அந்த ஆட­வர் 2017 செப்­டம்­பர் 7ஆம் தேதிக்­கும் நவம்­பர் 1ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் அந்­தக் குற்­றங்­க­ளைப் புரிந்­தார்.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பை ஏமாற்­றிய மோச­டிக் கும்­ப­லில் தானும் ஒரு­வன் என்­பதை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

கடந்த மார்ச் மாதம், டேவிட் 15 குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்­டார். அவர்­மீ­தான மேலும் 33 குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிக்­கப்­ப­டும்­போது கவ­னத்­தில் கொள்­ளப்­பட்­டன.

அவ­ரு­டைய கூட்­டா­ளி­கள் நால்­வ­ருக்கு ஏற்­கெ­னவே 17 ஆண்­டு­கள் ஒன்­பது மாதங்­கள்­வரை சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டு­விட்­டது.

பயிற்சி வகுப்பு மானி­யத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக, ஊழி­யர்­களை திறன் பயிற்சி வகுப்­பு­களுக்கு அனுப்­பும் சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் மானி­யம் கோரி விண்­ணப்­பிக்­க­லாம்.

செயல்­ப­டாத ஒன்­பது நிறு­வனங்­களின் பெயரில் ஊழி­யர்­கள் என்று நம்­பப்­படும் 25,000 பேர், இயக்­கு­நர்­கள், இடைத்­த­ர­கர்­கள் ஆகி­யோ­ரைப் பயன்­படுத்தி லிம்­மும் கும்­ப­லின் மற்ற உறுப்­பி­னர்­களும் பயிற்சி வகுப்பு மானி­யம் கோரி 8,300க்கும் மேற்­பட்ட மோசடி விண்­ணப்­பங்­களை ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்­பி­டம் சமர்ப்­பித்­த­னர். ஆனால், எந்­த­வொரு பயிற்சி வகுப்­பும் நடத்­தப்­ப­ட­வில்லை.

அந்த ஒன்­பது நிறு­வ­னங்­களில் ஆறு நிறு­வ­னங்­கள் மானி­யம் கோரி விண்­ணப்­பங்­க­ளைச் சமர்ப்­பித்­தன. மற்ற மூன்று நிறு­வ­னங்­களும் பயிற்சி வழங்­கு­நர்­கள் என்று குறிப்­பி­டப்­பட்­டன.

அவற்றுள் கிளென் பாயின்ட் கார்ப் என்ற நிறுவனத்தைத் தவிர, மற்ற நிறு­வ­னங்­க­ளின் வங்­கிக் கணக்­கு­களில் கிட்­டத்­தட்ட $40 மில்­லி­யன் போடப்­பட்­டது. அத­னைத் தொடர்ந்து, அதில் பெரும்­ப­கு­தித் தொகை வங்­கிப் பண­மாற்­றம் அல்­லது ரொக்­கக் காசோலை மூலம் எடுக்­கப்­பட்­டு­விட்­டது.

ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் சிங்­கப்­பூர் அமைப்பு, மானி­யக் கோரிக்கை விண்­ணப்­பங்­கள் குறித்து 2017 நவம்­பர் 1ஆம் தேதி காவல்­து­றை­யி­டம் புகார் செய்­தது.

மானி­யத் தொகை­யில் இது­வரை $18 மில்­லி­யன் மீட்­கப்­பட்டு­விட்­டது. இன்­னும் $21 மில்­லி­ய­னுக்­கும் மேலான தொகை மீட்­கப்­பட வேண்­டும்.