பிர­த­மர் லீ கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளார்

1 mins read
af3c30cb-6b89-4710-8456-8bd0d95255e0
-

பிர­த­மர் திரு லீ சியன் லூங்­குக்கு மீண்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர் முத­லா­வது கொவிட்-19 கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்டு வந்த சில நாட்­களிலே மீண்­டும் அவர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருப்­பது பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது.

அவர் தமது ஃபேஸ்புக்­கில் நேற்று வெளி­யிட்ட பதி­வில், தாம் நல­மு­டன் இருப்­ப­தா­க­வும் தமது மருத்­து­வர்­கள் தம்மைக் கிரு­மித்­தொற்று பாதிப்­பில் இருந்து விடு­படும் வரை தனி­மை­யில் இருக்­கும்­ப­டி பரிந்­து­ரைத்­தி­ருப்­ப­தா­க­வும் கூறி­னார்.

கிரு­மித்­தொற்­றால் ஏற்­கெனவே பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் ஐந்து முதல் 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு மீண்­டும் கொவிட்-19 கிரு­மித்தொற்று ஏற்­படும் சாத்தியம் உண்டு என்­றும் முதல் தொற்­று­டன் ஒப்­பி­டு­கை­யில் இதில் ஆபத்து அதி­கம் இல்லை என்று தமது மருத்­து­வர்­கள் கூறி­ய­தா­க­வும் திரு லீ தமது பதி­வில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

அதில் அவர், "ஸ்ரீ தெண்­டா­யு­த­பாணி கோவில் குட­மு­ழுக்கு விழா­வில் கலந்­து­கொள்ள நான் மிக­வும் ஆவ­லு­டன் இருந்­தேன். ஆனால், தொற்று பாதிப்பு கார­ண­மாக என்­னால் அதில் கலந்து­கொள்ள முடி­ய­வில்லை.

"விழா­வின் ஏற்­பாட்­டா­ளர்­களி­ட­மும் அதில் பங்­கேற்ற அனை­வரி­ட­மும் நான் கலந்­து­கொள்­ளா­மல் போன­தற்கு வருத்­தம் தெரி­வித்­துக்கொள்­கி­றேன். குட­மு­ழுக்கு விழா சிறப்­பாக நடை­பெற நான் வாழ்த்­து­கி­றேன்," என்று அந்­தப் பதி­வில் கூறி­னார்.

பிர­த­மர் லீக்கு முதல் முறை கொவிட்-19 கிரு­மித்­தொற்று மே மாதம் 22ஆம் தேதி உறு­தி­செய்­யப்­பட்­டது.

பிர­த­மர் லீ வீட்­டில் இருந்து கிரு­மித்­தொற்­றுக்கு சிகிச்சை பெறு­வ­தால், துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், தற்­கா­லி­கப் பிர­த­ம­ரா­கச் செயல்­ப­டு­வார் என்று பிர­த­மர் அலு­வ­ல­கம் நேற்று தெரி­வித்­தது.