தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டான் டோக் செங் மருத்துவமனையின் இயன்மருத்துவர்களால் நோயாளிகள் காத்திருக்கும் நேரம் குறைந்தது

2 mins read
67d58d77-bf38-4249-a5d1-1bd36ed829d0
-

டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யில் அவ­ச­ர­நி­லைப் பிரி­வில் கிட்­டத்­தட்ட ஓராண்­டுக்கு முன் தொடங்­கப்­பட்ட பரா­ம­ரிப்பு முறைக்­குப் பின், காத்­தி­ருக்­கும் நேரம், சிகிச்சை ஆகி­ய­வற்­றின் ஒருங்­கி­ணைப்பு மேம்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஓர் ஆண்­டுக்கு 132,000 பேர் இங்கு இயங்­கும் அவ­ச­ர­நி­லைப் பிரி­விற்கு சிகிச்­சைக்­காக வரு­கின்­ற­னர். அதில் 19,000 பேர் அப்­பி­ரி­வுக்கு வரும் அவ­ச­ர­நி­லை­யற்ற நோயா­ளி­கள். இவர்கள் 15 விழுக்காட்டினர்.

தங்­க­ளின் மூட்­டு­கள், எலும்­பு­கள் மற்­றும் தசை­களில் ஏற்­படும் வலி­க்கு சிகிச்­சை பெறு­வ­தற்­காக வரு­கின்­ற­னர்.

இதுபோன்ற வலிக்கு சிகிச்சை பெறு­வ­தற்­காக வரு­வோரின் எண்­ணிக்கை அதி­க­மா­ன­தால் டான் டோக் செங் மருத்­து­வ­மனை ஒரு புதிய பரா­ம­ரிப்பு முறை­யைத் தொடங்­கி­யது.

அந்த முறை­யில் அவ­சர நிலைப் பிரிவுக்கு சிகிச்­சைக்­காக வரு­வோர் முத­லில் நன்கு பயிற்சி பெற்ற இயன்­ம­ருத்­து­வ­ரைச் சந்­திப்­பார்­கள்.

எலும்பு மற்­றும் தசை தொடர்­பான பிரச்­சி­னை­க­ளு­டன் அவர்­கள் வந்­தி­ருந்­தால், அதற்கு இயன்­ம­ருத்­து­வரே சிகிச்சை அளிப்­பார். இந்த முறை­யால் சிகிச்­சைக்­காக காத்­தி­ருக்­கும் நேரம் மேம்­படும். மேலும், சரி­யான நேரத்­தில் அனை­வ­ருக்­கும் சிகிச்சை அளிக்­கப்­படும் நிலை ஏற்­ப­டு­கிறது.

இயன்­ம­ருத்­து­வம், அவ­ச­ர­நிலை, எலும்­பி­யல், கை, மறு­சீ­ர­மைப்பு நுண் அறுவை சிகிச்சை, கதி­ரி­யக்­கப் பிரி­வு­கள் ஆகி­யவை ஒன்­றி­ணைந்து இந்த முறையை 2022 ஜூன் மாதம் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் தொடங்­கின.

"எலும்­பு­கள், தசை­களில் இருக்­கும் பிரச்­சி­னை­க­ளுக்­காக சிகிச்­சைக்கு வரு­வோ­ரைத் திறம்­ப­டக் கையாள இயன்­ம­ருத்­து­வர்­க­ளுக்குப் பயிற்சி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

"இந்த சிகிச்சை முறை ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லும் பிரிட்­ட­னி­லும் அதி­க­மா­கப் பயன்­ப­டுத்தி வந்­தா­லும் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­தான் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­க­ளிலே முதன் முறை­யாக இந்த முறை­யைப் பயன்­ப­டுத்­தி­யது," என்று அந்த மருத்­து­வ­ம­னை­யின் முதன்மை இயன்­ம­ருத்­து­வர் கோ ஷுவே­டிங் கூறி­னார்.

2022 ஜூன் மாதம் முதல் நன்கு பயிற்சி பெற்ற இயன்­மருத்­து­வர்­கள் இது­வரை 134 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளித்­துள்­ள­னர்.

அவர்­கள் நோயா­ளி­க­ளைப் பார்த்து, சிகிச்­சை­ய­ளித்­தா­லும் அவர்­க­ளுக்­குத் தேவை­யான மருந்­து­க­ளை­யும் மருத்­துவ விடுப்­புச் சான்­றி­த­ழை­யும் மருத்­து­வரே வழங்­கு­கி­றார்.

"இதன் மூலம் எங்­க­ளால் உயி­ருக்கு ஆபத்­தான அவ­ச­ர­நி­லை­சிகிச்­சை­ய­ளிப்­ப­தில் அதிக கவ­னம் செலுத்த முடி­கிறது. மேலும் அவ­ச­ரப் பிரி­வின் செயல்­தி­ற­னும் மேம்­படும்," என்று அவ­ச­ர­நி­லைப் பிரி­வின் மூத்த மருத்­துவ ஆலோ­ச­கர் டாக்­டர் டெரன்ஸ் சீ கூறி­னார்.

இந்த சிகிச்சை முறை­யால், இத்­த­கைய நோயா­ளி­க­ளின் காத்­தி­ருக்­கும் நேரம் 30லிருந்து 50 விழுக்­காடு வரை குறைந்­துள்­ளது என்­றும் இயன்­ம­ருத்­துவ சிகிச்சை நாடும் நோயா­ளி­க­ளின் காத்­தி­ருக்­கும் நேரம் 70% வரை குறைந்­துள்­ளது என்றும் கூறப்­பட்­டது.

இதர சிங்­கப்­பூர் அர­சாங்க மருத்­து­வ­ம­னை­களும் தங்­கள் அவ­ச­ர­நி­லைப் பிரி­வு­களில் நோயா­ளி­கள் காத்­தி­ருக்­கும் நேரத்­தைக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்­கி­யுள்­ளன.