'சேதமடைந்த கூரைச் சுவரே தொங்குமேடை சம்பவத்துக்குக் காரணம்'

1 mins read
e6d08743-9559-4c25-946a-7771a5b2a0e1
-

சென்ற மாதம் 11ஆம் தேதி­யன்று பூன் லே வட்­டா­ரத்­தில் உள்ள வீவக பூளோக் ஒன்­றின் 15வது மாடி­யில் ஒரு தொங்­கு­மேடை அபா­ய­க­ர­மான முறை­யில் தொங்­கி­யது. அத­னால் அதி­லி­ருந்து இரண்டு ஊழி­யர்­கள் அவ­ச­ர­மாக வெளி­யேற நேரிட்­டது.

சம்­பந்­தப்­பட்ட வீவக பூளோக்­கின் கூரைச் சுவர் சேத­ம­டைந்­தி­ருந்­த­தால் தொங்­கு­மே­டை­யைத் தாங்­கிக் கொண்­டி­ருந்த தொடர்பு வலு­வி­ழுந்­து­போ­னது; அத­னால்­தான் இந்த அசம்பாவிதம் நேர்ந்ததென முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ளது.

கட்­டட, கட்­டு­மான ஆணை­யம் இத்­த­க­வலை வெளி­யிட்­டது.

தொங்­கு­மேடை அபா­ய­க­ர­மான முறை­யில் தொங்­கிக்­கொண்­டி­ருந்­த­தால் அதி­லி­ருந்த ஊழி­யர்­களில் ஒரு­வர் புளோக்­கின் 15வது மாடிக்கு ஏறிச் செல்ல வேண்­டி­யி­ருந்­தது. பின்னர் அவர் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­ன­ரால் மீட்­கப்­பட்­டார்.

பாதிக்­கப்­பட்ட மற்­றோர் ஊழி­யர் 14வது மாடி­யில் இருக்­கும் ஒரு வீட்­டுக்­குள் பாது­காப்­பாக நுழைந்­தார்.

பூன் லே டிரைவ் புளோக் 199ல் இச்சம்பவம் நிகழ்ந்தது.