மலேசியாவின் ஜோகூர் பாரு நகரில் இருக்கும்போது சலுகை விலையில் வழங்கப்படும் 500 லிட்டர் அளவிலான டீசலைத் தவறாகப் பயன்படுத்தியதாக சிங்கப்பூரைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்.
24 வயது பெஞ்சமின் லோ யோங் பாங் என்ற சந்தேக நபரிடம் டீசல் இருந்திருக்கிறது. அது சிங்கப்பூரைச் சேர்ந்த சுற்றுலா பேருந்தில் கண்டெடுக்கப்பட்டது.
ஜோகூர் பாருவின் ஜாலான் கெம்பாஸ் பாரு பகுதியில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் சட்டவிரோதமாக டீசலைப் பயன்படுத்தியதற்கான பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுக்கு லோதான் பொறுப்பு என்று நம்பப்படுகிறது. இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்தது.
இந்த விவகாரத்துக்கான நீதிமன்ற விசாரணை தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை லோ மறுத்தார். விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் லோ மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
அவை நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சமாக ஒரு மில்லியன் ரிங்கிட் அபராதமும் (293,000 வெள்ளி) மூவாண்டுச் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.