தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூரில் இருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ

1 mins read
f36ab06c-94ec-4b73-9939-6a00c4a315c1
-

உல­கக் காற்­பந்து வர­லாற்­றில் ஆகச் சிறந்த விளை­யாட்­டா­ளர்­களில் ஒரு­வ­ரா­கக் கரு­தப்­படும் கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ சிங்­கப்­பூ­ரில் இருக்­கி­றார். சிங்­கப்­பூ­ருக்கு இரண்டு நாள் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார் இவர்.

இளை­யர்­க­ளுக்­கான இரண்டு உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டங்­க­ளுக்கு ஆத­ரவு வழங்க சிங்­கப்­பூர் வந்­துள்­ளார் 38 வயது ரொனால்டோ. சிங்­கப்­பூர் செல்­வந்­தர் பீட்­டர் அந்த உப­கா­ரச் சம்­ப­ளத் திட்­டங்­க­ளுக்கு நிதி வழங்­கு­கி­றார்.

ரொனால்­டோ­வும் பீட்­டர் லிம்­மும் நீண்­ட­கால நண்­பர்­கள்.

ரொனால்டோ சிங்­கப்­பூ­ரில் இருக்­கும் இந்­தக் கால­கட்­டத்­திற்கு #BeSIUPER வார­யி­றுதி எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

தனது பய­ணத்­தின் ஓர் அங்­க­மாக ரொனால்டோ நேற்று பூம­லைக்­குச் சென்­றி­ருந்­தார். அங்கு பீட்­டர் லிம்­மின் பெயர் சூட்­டப்­பட்ட மரத்­தின்­கீழ் உப­கா­ரச் சம்­ப­ளம் பெறும் 200 பேரு­டன் பட­மெ­டுத்­துக்­கொண்­டார்.

தற்­போது சவூதி அரே­பி­யா­வின் அல் நாசர் குழு­வில் விளை­யா­டு­கி­றார் ரொனால்டோ.