ராணுவப் பயிற்சிகள் மேம்பட ஐந்து நாட்டு அமைப்பு பேச்சு

3 mins read
08eed941-3b69-4dcf-971f-abe52163c3f8
-

ஆதிக்க போட்டாபோட்டி சூழலில் தற்காப்பு ஏற்பாடு முக்கியம் என்பதை மறுஉறுதிப்படுத்தின

ஐந்த நாட்டு தற்­காப்பு ஏற்பாட்டில் இடம்­பெற்­றுள்ள நாடு­க­ளைச் சேர்ந்த தற்­காப்பு அமைச்­சர்­கள் தங்­கள் ராணு­வப் பயிற்­சி­க­ளின் நிலையை மேம்­ப­டுத்த விரும்­பு­கிறார்­கள்.

இந்த வட்­டா­ரத்­தில் வல்­லரசுகளுக்கு இடை­யில் ஆதிக்க போட்டாபோட்டி அதி­க­மாகி வரும் சூழ­லில் தங்­க­ளு­டைய தற்­காப்பு ஏற்பாடு மதிப்­பு­மிக்­க­தாக தொடர்­கிறது என்­பதை அவர்­கள் மறு­உறு­திப்­ப­டுத்­தி­னர்.

சிங்­கப்­பூ­ரில் நடக்­கும் ஷங்ரிலா உச்­ச­நிலை மாநாட்டை ஒட்டி அந்த ஐந்து நாட்டு அமைப்­பின் கூட்­டம் நேற்று இடம்­பெற்­றது.

அதற்­குப் பிறகு செய்­தியா­ளர்­களி­டம் பேசிய ஆஸ்­தி­ரே­லி­யா­வின் தற்­காப்பு அமைச்­சர் ரிச்­சர்ட் மார்­லஸ், "ஆண்டுதோறும் நடந்­து­வ­ரும் ஐந்து நாட்டு தற்­காப்புப் பயிற்சி ஐந்து நாடு­க­ளின் தற்­காப்­புப் படை­க­ளுக்கு மிக முக்­கியமான­தாக இருக்­கிறது," என்­றார்.

சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நேற்றைய கூட்­டத்தை வழி நடத்­தி­னார்.

ஐந்து நாட்டு தற்­காப்பு அமைப்­பில் அங்­கம் வகிக்­கும் நாடு­க­ளின் ராணு­வத் தவை­வர்­களி­டம் இருந்து நல்ல தக­வல்­கள் கிடைத்­த­தால், ஐந்து நாடு­க­ளின் அமைச்­சர்­களும் பயிற்­சி­களை மேம்­ப­டுத்­து­வது பற்றி விவா­தித்ததாக டாக்­டர் இங் கூறி­னார்.

தற்­காப்பு ஏற்பாட்டு நாடு­கள் சேர்ந்து நல்­ல­படி இணைந்து செயல்­படும் ஆற்­ற­லைப் பலப்­படுத்­திக்கொள்­ளும் நோக்­கத்­து­டன் காலக்­கி­ரம முறைப்­படி பயிற்சி­களை நடத்­தி வருகின்றன.

டாக்­டர் இங், திரு மார்­லஸ் ஆகிய இரு­வ­ரு­டன் மலே­சியா, நியூ­சி­லாந்து, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளின் தற்­காப்பு அமைச்­சர்­களும் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­ட­னர்.

இந்த வட்­டா­ரத்­தில் அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் போட்­டா­போட்டி அதி­க­மாகி வரு­வ­தால் வட்­டார நிலைப்­பாடு பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக தெரி­வித்த டாக்­டர் இங், ஐந்து நாட்டு தற்­காப்பு ஏற்­பாடு என்­பது ஓர் உடன்­பா­டா­கவோ ஒரு கூட்­டணி அமைப்­பா­கவோ பெயர் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை என்­பதைச் சுட்­டி­னார்.

இதன் கார­ண­மாக அந்த ஏற்­பாடு யாருக்­கும் மிரட்­ட­லாக இல்லை. எந்­த­வொரு நாட்­டுக்­கும் அது எதி­ரா­னது அல்ல என்றும் அவர் கூறி­னார்.

அந்த ஏற்­பாடு நிலைப்­பாட்­டிற்­கான ஒரு சக்­தி­யாக தொடர்ந்து இருந்து வரும் என்று அவர் நம்­பிக்­கைத் தெரி­வித்­தார்.

பயிற்­சி­யி­லும் ஆற்­றல்­க­ளைப் பலப்­ப­டுத்­து­வ­தி­லும் அதிக உத்தி­பூர்வ, தற்­காப்பு ஒத்­து­ழைப்பு இடம்­பெ­று­வ­தற்­கான வழி­யாக அந்த ஏற்­பாடு திக­ழ­லாம் என்று மலே­சிய அமைச்­சர் முகம்­மது ஹசன் யோசனை தெரி­வித்­தார்.

தற்­காப்பு தொழில்­து­றை­யைப் பலப்­ப­டுத்­த­வும் ஒத்­து­ழைப்பை அதி­க­மாக்­க­வும் தற்காப்பு ஏற்பாட்டு நாடு­க­ளு­டன் மலே­சியா அணுக்­க­மா­கச் சேர்ந்து செயல்­படும் என்றாரவர்.

மலேசியா தொழில்­நுட்­பத்தைப் பகிர்ந்­து­கொள்­ளும், கூட்­டுப் பயிற்­சி­களை நடத்­தும் என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

ஐந்து நாட்டு தற்­காப்பு ஏற்­பாட்­டின் அமைச்­சர்­கள் ஐவ­ரும் அந்த ஏற்­பாட்­டிற்­கான தங்­கள் நாடு­க­ளின் கடப்­பாட்டை நேற்று மறு­உறு­திப்­ப­டுத்­தி­னர்.

அந்த ஏற்­பாடு மூலம் 1971 முதல் கணி­ச­மான முன்­னேற்­றம் ஏற்­பட்டு இருப்­ப­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

வட்­டாரப் பாது­காப்­பிற்­கும் நிலைப்­பாட்­டிற்­கும் உரிய ஆக்க­க­ர­மான, அமை­தியை நோக்­க­மா­கக் கொண்ட ஓர் ஏற்­பாடு என்ற முறை­யில் அந்த தற்­காப்பு ஏற்­பாட்­டின் முக்­கி­யத்­து­வத்தை அமைச்­சர்­கள் விவா­தித்­த­தாக தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

இத­னி­டையே, அந்­தக் கூட்­டத்­திற்­குப் பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சிங்­கப்­பூ­ரின் தற்­காப்பு அமைச்­சர், நண்­பர்­க­ளி­டையே மட்­டு­மன்றி எதி­ரா­ளிக்கு இடை­யே­யும் தொடர்பு வழி ஏற்­பா­டு­கள் தோற்­று­விக்­கப்­பட வேண்­டும் என்று தெரி­வித்­தார்.

அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யில் நில­வும் பதற்­றம் கவலை தரு­வ­தாக அவர் கூறி­னார்.