காவல்துறை தின அணிவகுப்பு நேற்று நடந்தது. அதில் தலைசிறந்த தரைப் பிரிவாக கிளமெண்டி காவல்துறை பிரிவு முடிசூட்டப்பட்டது.
இத்துடன் 11வது முறையாக அந்தப் பிரிவு இந்த விருதை வென்றிருக்கிறது.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் நேற்று அந்த விருதை வழங்கினார். உள்துறைக் குழு பயிலகத்தில் நடந்த அந்த நிகழ்ச்சியில் சுமார் 650 அதிகாரிகளும் பேரணி அணிவகுப்பாளர்களும் கலந்துகொண்டனர். 2,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
வீடு ஒன்றின் குளியலறையில் ஒரு மாதைக் காப்பாற்றியது முதல் சென்ற ஆண்டில் பல சாதனைகளைச் செய்து கிளமெண்டி காவல்துறை பிரிவு விருதை வென்றிருக்கிறது.
அறிவுத்திறன் குறைந்த பதின்ம வயது பெண் ஒருவரை வெற்றிகரமான முறையில் லாவண்டர் ஸ்திரீட்டில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் கிளமெண்டி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கடைகளில் பொருள்களை வாங்குவது போல் நடித்து திருடும் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து பாதுகாப்பு பற்றிய புரிந்துணர்வை மேம்படுத்த அந்தப் பிரிவின் அதிகாரிகள் உதவினர். விமான நிலைய காவல்துறை பிரிவு, ஜூரோங் காவல்துறை பிரிவு உள்ளிட்ட இதர பிரிவுகளுக்கும் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய துணைப் பிரதமர், காவல்துறை அதி காரியின் பணி எளிதானதல்ல. குற்றச்செயல்களைத் தடுப்பதில், கண்டுபிடிப்பதில் ஏராளமான சவால்களை அன்றாடம் வெற்றிகரமான முறையில் அவர்கள் சமாளிக்கிறார்கள் என்றார்.
துணிச்சல், அர்ப்பணிப்பு உணர்வு, நிபுணத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் நன்றி கூறினார்.

