இயற்கை வனப்பகுதிகளின் பாதுகாப்பை வலுப்படுத்துக

2 mins read
a0969c39-a1e3-4fe5-8264-0b8bc2cf1b8a
-

உல­கில் தற்­போ­துள்ள இயற்கை வனப்­ப­கு­தி­க­ளின் பாது­காப்­பு­நிலையை வலு­வாக்­கு­வ­தும் பூங்கா இணைப்­பு­களை விரி­வு­படுத்­து­வ­தும் கிட்­டத்­தட்ட 1,200 விலங்­கி­னங்­க­ளின் இருப்­பி­டங்­களைப் பாது­காக்க உத­வ­லாம் என்று புதிய ஆய்வு ஒன்று கண்­ட­றிந்­துள்­ளது.

அழி­யக்­கூ­டிய நிலை­யில் உள்ள சுமார் 5,000 விலங்­கி­னங்­களில் தற்­போது 70% விலங்­கினங்­க­ளுக்­குப் பாது­காக்­கப்­படும் வனப்­ப­கு­தி­களில் இருப்­பிடம் இல்லை அல்­லது தர­மி­றக்­கப்­பட்ட, குறைக்­கப்­பட்ட, அர­சிதழ் அங்­கீ­கா­ரத்தை இழந்த பாது­காக்­கப்­பட்ட பகு­தி­களில் அந்த விலங்­கி­னங்­கள் கண்­டு­பிடிக்­கப்­பட்­டன.

உள்­கட்­ட­மைப்பு தொடர்­பான விரி­வாக்­கம், சுரங்­கப் பணி அல்­லது மற்ற நட­வ­டிக்­கை­க­ளால் காடு­கள் அழிக்­கப்­பட்டு விலங்­கி­னங்­க­ளின் வசிப்­பி­டம் பறி­போ­க­லாம் அல்­லது வாழ்­வ­தற்­கான தகு­தியை இழக்­க­லாம்.

இதன்­படி 2021ஆம் ஆண்டு நில­வ­ரப்­படி 278 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான ஹெக்­டர் அள­வில் வனப்­ப­கு­தி­கள் தர­மி­றக்­கப்­பட்­டுள்­ளன, குறைக்­கப்­பட்­டுள்­ளன அல்­லது அர­சி­தழ் தகுதியை இழந்­துள்­ளன என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம், அமெ­ரிக்­கா­வின் பிரின்ஸ்­டன் பல்­க­லைக்­க­ழ­கம், பிரிட்­ட­னின் டர்­ரம் பல்­கலைக்­க­ழ­கம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள் கண்­ட­றிந்­துள்­ள­னர்.

வேளாண் விரி­வாக்­கத்­திற்­காக தென்­கி­ழக்­கா­சிய பகு­தி­யில் சுமார் 1.6 மில்­லி­யன் ஹெக்­டர் அள­வி­லான பூங்­காக்­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இயற்­கைச் சூழ­லில் மட்­டுமே வாழக்­கூ­டிய அதா­வது செயற்கை முறை­யில் அமைக்­கப்­பட்ட சூழ­லில் வாழச் சிர­மப்­படும் விலங்­கி­னப் பட்­டி­ய­லில் உள்ள 5,000 விலங்­கி­னங்­க­ளின் மீது ஆய்­வா­ளர்­கள் கவ­னம் செலுத்­தி­னர்.

நேற்று முன்­தி­னம் 'சைன்ஸ் எட்­வான்­சஸ்' என்ற அறி­வி­யல் இத­ழில் வெளி­யான ஆய்வு கண்­டு­பி­டிப்­பு­க­ளின்­வழி தற்­போ­துள்ள பாது­காக்­கப்­பட்ட பகு­தி­கள் பல்­லு­யிர் பாதுகாக்கும் சூழல்­க­ளாக இருத்­தல் அவ­சி­யம் என்­ப­தைச் சுட்­டி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் மனித நட­வடிக்கை மற்­றும் நக­ர­ம­ய­மாக்­கு­தலால் ஏற்­ப­டக்­கூ­டிய தாக்­கத்­துக்கு எதி­ராக இயற்கை வனப்­பகு­தி­க­ளைப் பாது­காத்­திட, இயற்­கைப் பூங்­காக்­க­ளைக் கொண்ட கட்­ட­மைப்பு ஒன்றை அர­சாங்­கம் அமைத்­துள்­ளது. அத்­து­டன் பசு­மைப் பாதை­கள் அமைத்து இரு இயற்­கைப் பகு­தி­க­ளுக்கு இடை­யி­லான இணைப்பை வலுப்­ப­டுத்­த­வும் முனைந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் 5% நிலம் மட்­டுமே சிங்­கப்­பூ­ரில் பாது­காக்­கப்­படும் பகு­தி­யாக உள்­ளது. அதில் நான்கு இயற்கை வனப்­ப­கு­தி­களும் அடங்­கும்.