'ஓ' நிலைத் தேர்வுக்கு முன்னர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இடம் பிடிக்கலாம்

'ஓ' நிலைத் தேர்வுக்கு முன்னர் பலதுறைத் தொழிற்கல்லூரியில் இடம் பிடிக்கலாம்

1 mins read
5c62d490-363d-456b-8778-d7f8b237cb04
-

சாதா­ரண நிலைத் தேர்வு முடி­வு­கள் ஜன­வ­ரி­யில் வெளி­யா­வ­தற்கு முன்பே சுமார் 5,600 மாண­வர்­களுக்கு ஐந்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் ஒன்­றில் இடம் கிடைத்­து­விட்­டது. இது பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யின் ஆரம்­ப­கட்ட சேர்க்கை நட­வ­டிக்­கை­வழி (இஏஇ) சாத்­தி­ய­மா­னது.

மாண­வர்­களை அவர்­க­ளின் ஆர்­வம், திறமை அடிப்­ப­டை­யில் தேர்ந்­தெ­டுக்­கும் நெகிழ்­வுத்­தன்­மையை இந்த இஏஇ, பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­க­ளுக்கு வழங்­கு­கிறது. இத­னால் கல்­வி­சார்ந்த மதிப்­பெண்­க­ளைத் தவிர மாண­வர்­க­ளி­டம் இருக்­கக்­கூ­டிய பல­தரப்­பட்ட திறன்­களை அடை­யாளம் காண முடி­யும். ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பட்­ட­யம் பெற்ற அனுஷ்கா ஷோபி நாரா­ய­ணன் (படம்), 20, இஏஇ மூலம் பலன் கண்­ட­வர்.

உயி­ரி­யல் தொடர்­பான ஆய்­வில் ஈடு­பட விரும்பி அவர் உயிர்­ம­ருத்­துவ அறி­வி­யல் துறை­யில் பயில விண்­ணப்­பித்­தி­ருந்­தார். தனது விருப்­பத்தை அறிந்­தி­ருந்­த­தால் தான் தாம­திக்க விரும்­ப­வில்லை என்­றும் 'ஓ' நிலைத் தேர்வு முடி­வு­களை மட்­டும் நம்பி இருக்க வேண்­டாம் என்­றும் இவ்­வாறு முடி­வெ­டுத்­தார்.