தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இல்லப் பராமரிப்பு செலவுகளுக்கு மெடிசேவ் நிதி பயன்படுத்தலாம்

2 mins read
7c9b7fc1-9d33-438c-9ed2-4aacd35a2930
-

இல்­லத்­தி­லேயே தங்கி தீவிர நோய்­க­ளுக்கு சிகிச்சை பெறு வோர் இனி மருத்­துவ பரா­ம­ரிப்பு செல­வு­க­ளுக்­கும் தாதிமை சேவை­க­ளுக்­கும் தங்­க­ளு­டைய மெடி சேவ் கணக்­கில் இருக்­கும் பணத்­தைப் பயன்படுத்த முடி­யும்.

அக்­டோ­பர் 1ஆம் தேதி­யில் இருந்து இது நடை­மு­றைக்கு வரு­கிறது.

இதனை நேற்று அறி­வித்த சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங், இதன் தொடர்­பில் மருத்­துவ சேவை வழங்­கு­வோ­ருக்கு தனது அமைச்சு நிதி­யும் ஆத­ர­வும் வழங்­கும் என்­றார்.

இத­னால் இல்­லத் தாதிமை அற­நி­று­வ­னம் போன்ற அமைப்­பு­கள் தங்­க­ளு­டைய நோயாளி களுக்கு வழங்­கப்­படும் வீட்­டுச் சிகிச்­சைக்­கான செல­வு­க­ளுக்கு அவர்­க­ளின் மெடி­சேவ் கணக்­கில் இருந்து நிதி­யு­தவி பெற முடி­யும். தற்­போது மருத்­துவ செல­வு­க­ளுக்கு மருந்­த­கங்­கள் மெடி­சே­வுக்கு கோரிக்கை விடுப்­ப­து­போல இது இருக்­கும்.

இந்­தத் திட்­டம் ஒரு நிலைக்கு வரும்­போது இதர இல்ல மருத்­துவ, தாதிமை சேவை­க­ளுக்­கும் விரி­வுப்­ப­டுத்­தப்­படும் என்­றார் அமைச்­சர்.

முதி­யோர் சாத்­தி­யப்­படும் வரை வீட்­டி­லி­ருந்து சிகிச்சை பெறு­வதை ஊக்­கு­விக்­கும் முயற்­சி­க­ளின் ஒரு பகு­தி­யாக மெடி­சேவ் நிதி­யைப் பயன்­ப­டுத்த அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

மருத்­து­வ­ம­னை­க­ளை­விட இல்­லத்­தில் இருந்து மருத்­து­வக் கவ­னிப்­பு­க­ளைப் பெறு­வது உணர்­வு­பூர்­வ­மாக முதி­யோ­ருக்கு சிறந்­த­தாக இருக்­கும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஏஐசி எனும் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சமூ­கப் பரா­ம­ரிப்­பின் கருத்­த­ரங்­கில் நேற்று பேசிய அமைச்­சர் ஓங், ஜூலை 1ஆம் தேதி­யி­லி­ருந்து இல்­லப் பரா­ம­ரிப்பு சேவை­க­ளுக்­கான காணொளி மருத்­துவ ஆலோ­ச­னை­க­ளுக்­கும் மானி­யம், மெடி­சேவ் நீட்­டிக்­கப் படு­வ­தாக அறி­வித்­தார். இந்த மாற்­றத்­தின் மூலம் தொலை மருத்­துவ சேவை­க­ளுக்கு நிதி உதவி கிடைக்­கிறது.

இது, இல்­லப் பரா­ம­ரிப்பு சேவை வழங்­கு­வோ­ருக்கு பேரு­த­வி­யாக இருக்­கும் என்று மூப் படை­தல் விவ­கா­ரங்­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான ஓங் கூறி­னார்.