பூங்காக் கழகம் விரித்த வலையில் எட்டு காட்டுப் பன்றிகள் சிக்கின

பூங்காக் கழகம் விரித்த வலையில் எட்டு காட்டுப் பன்றிகள் சிக்கின

2 mins read
507751ec-f104-403d-933f-ec0bedb9a841
-

தேசிய பூங்­காக் கழ­கம், புக்­கிட் பாஞ்­சாங்­கில் மே மாதம் முதல் எட்டு காட்­டுப்­பன்­றி­க­ளைப் பிடித்­துள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை புக்­கிட் பாஞ்­சாங் ஷெங்­ஹுவா இயற்கை பூங்கா அருகே 40 வய­தான ஆட­வரை காட்­டுப்­பன்றி தாக்­கி­யது.

இத்­தாக்­கு­த­லில் அவ­ருக்கு வலது காலில் ஏற்­பட்ட காயத்­திற்கு 20க்கும் மேற்­பட்­டத் தையல்­கள் போடப்­பட்­டன.

இச்­சம்­ப­வம் குறித்து பேசிய வன­வி­லங்கு மேலாண்­மைக் குழு­மத்­தின் இயக்­கு­நர் ஏட்­ரி­யன் லூ, நாங்­கள் பாதிக்­கப்­பட்ட நப­ரு­டன் தொடர்­பில் இருக்­கி­றோம் என்­றார்.

மேலும், அந்த இடத்­தைத் தொடர்ந்து கண்­கா­ணிக்­கி­றோம். மக்­க­ளு­டை­ய பாது­காப்­பிற்­காக காட்­டுப் பன்­றி­கள் வனப்­ப­கு­தியை விட்டு வெளி­யேறி குடி­யி­ருப்­புப் பகு­தி­களில் நுழை­வ­தைத் தடுக்க தடுப்பு வேலி­களை அமைத்து வரு­கி­றோம் என்­றும் அவர் கூறி­னார்.

காட்­டுப் பன்­றி­க­ளுக்கு எப்­போது வலை விரிக்­கப்­பட்­டது. இதற்கு முன்பு எத்­தனை காட்­டுப் பன்­றி­கள் பிடிக்­கப்­பட்­டன என்பன போன்ற விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

"வன­வி­லங்­கு­களை எப்­ப­டிச் சமா­ளித்து பாது­காப்­பாக இருப்பது குறித்து பொது­மக்­க­ளி­டம் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த நாங்­கள், மற்ற அமைப்­பு­க­ளு­டன் இணைந்­து பணி­யாற்றி வரு­கி­றோம். வன­வி­லங்­கு­க­ளுக்கு உண­வ­ளிப்­பது சட்­ட­வி­ரோ­த­மான செயல். அச்­செ­யலை செய்­ப­வர்­கள் மீது அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். இது அவற்­றின் இயற்­கை­யான உண­வுப் பழக்­கத்தை மாற்றி, உண­வுக்­காக மனி­தர்­களை நாடு­வ­தற்கு வழி­வ­குக்­கும்" என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

இது­போன்று வேறு ஒரு சம்­ப­வம் மே மாதம் 1ஆம் தேதி நடந்­துள்­ளது. அதில் 34 வயதுப் பெண்­ணைக் காட்­டுப்­பன்றி தாக்­கி­ய­தில் அவ­ருக்கு பல்­வேறு இடங்­களில் காயம் ஏற்­பட்­டது.

புக்­கிட் பாஞ்­சாங் குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர், "இப்­ப­கு­தி­யில் பன்­றி­கள் அடிக்­கடி காணப்­ப­டு­கின்­றன.

அவை பொது­வா­கத் தாக்­கு­வ­தில்லை, மேலும் பன்­றி­க­ளைப் பிடித்து அதைக் கொல்­வ­தற்கு பதி­லாக அவற்றை மக்­கள் நட­மாட்­டம் இல்­லாத இடத்­திற்கு கொண்டு செல்­ல­லாம்," என்று யோசனை கூறி­னார்.

பன்­றியை எதிர்­கொள்­ளும் போது, ​​மக்­கள் முடிந்­த­வரை அமை­தி­யாக இருந்து, பாது­காப்­பான இடத்தை நோக்கி மெது­வாக நகர்ந்து செல்ல வேண்­டும். அவற்றைத் தொந்­த­ர­வு செய்­யவோ, அவற்­றிற்கு உண­வ­ளிக்­கவோ கூடாது. வளர்ந்­த காட்­டுப் பன்­றி­கள் இளம் பன்­றிக்­குட்­டி­க­ளு­டன் காணப்­பட்­டால், அவற்றை நெருங்க வேண்­டாம்.

அவை தன்­னு­டை­ய குட்டி களைப் பாது­காக்க நம்மை முரட்­டுத்­த­ன­மா­கத் தாக்­கக் கூடும். அதைத் தனியே விட்­டு­வி­டுங்­கள்," என்றும் திரு ஏட்ரியன் லூ அறி­வு­றுத்­தி­னார்.

பொது­மக்­கள் காட்­டுப் பன்றி களைக் கண்­டால் 1800-4761600 என்ற எண்­ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.