2020ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள விமானங்களில் பயணிகள் பிரச்சினைகள் ஏற் படுத்திய சம்பவங்கள், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 50% அதிகரித்தது என்று அனைத்துலக விமானப் போக்குவரத்து சங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
2022ல் ஒவ்வொரு 568 விமானங்களுக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது, 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் 47 விழுக்காடு அதிகம். 2021ல் ஒவ்வொரு 835 விமானங்களுக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பொதுவான சம்பவங்களான விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடப்பது, ஊழியர்களைத் திட்டுவது மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவை இவற்றில் அடங்கும் என்று உலகளாவிய விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியது.
அந்த அமைப்பு உலகளாவிய விமானப் போக்குவரத்தில் 83 விழுக்காட்டை உள்ளடக்கிய சுமார் 300 விமான நிறுவனங் களைப் பிரதிநிதிக்கிறது.
2022ஆம் ஆண்டில் பெரும் பாலான கட்டாய முகக்கவசம் அணியும் விதிமுறை அகற்றப் பட்ட பிறகு விதிமுறைகளைப் பின்பற்றாத சம்பவங்கள் குறைந்தன என்று போக்குவரத்து சங்கம் குறிப்பிட்டது.
கழிவறைகளில் புகை பிடித்தல், இருக்கை வார் அணியும் உத்தரவுகளைப் பின்பற்றாதது, உடைமைகளை அதற்குரிய இடத்தில் வைக்கத் தவறுதல். இவையும் விதிமுறைகளுக்கு இணங்காத சம்பவங்களில் அடங்கும்.
விமான ஊழியர்களிடம் தவறான முறையில் நடந்துகொள்ளும் சம்பவங்கள் மிகவும் அரிதாகவே நடந்துவந்த சூழலில், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ல் இச்சம்பவங்கள் 61 விழுக்காடு அதிகரித்தன.
இதனால் சங்கம் தன்னுடைய உறுப்பினர்களை மாண்டி யோல் நெறிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியது.
இந்த நெறிமுறை, இது போன்ற சம்பவங்கள் குறித்து வழக்குத் தொடர அதிக அதிகாரங்களுக்கு வழி வகுக் கிறது.
எம்பி14 என்றும் அழைக்கப் படும் நெறிமுறை, பாதுகாப்பு விதிமுறைகளை மீறி விமான ஊழியர்களை தகாத வார்த்தை களால் பேசும் பயணிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உறுப்பு நாடுகளுக்கு அதிகார மளிக்கிறது.
பயணிகளின் சொந்த ஊர் எதுவாக இருந்தாலும் அவர்களது தகாத செயல்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க சட்டபூர்வ அதிகாரம் அரசாங்கங்களுக்கு இருப்பதையும் இது உறுதி செய்கிறது.
இதுவரை சிங்கப்பூர் உட்பட 45 நாடுகளில் எம்பி14 பயன் படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய நாடுகள், உலக பயணிகளின் போக்குவரத்தில் 33 விழுக்காட்டை கொண்டுள்ளன.
சங்கத்தின் துணை இயக்கு நரான ஜெனரல் கான்ராட் கிளிஃபர்ட், தொந்தரவு விளைவிக்கும் பயணிகளின் சம்பவங்கள் அதிகரிப்பது கவலை அளிக்கிறது என்றார்.
பயணிகள், விமான ஊழியர்கள் இரு தரப்பினருக்கும் பாதுகாப்பான, தொந்தரவு இல்லாத பயணங்களுக்கு உரிமை உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

