மூன்று அம்சங்களில் சாதிக்க வேண்டும்: அமைச்சர் ஃபூ

2 mins read
250fd554-e5f8-4fc3-aac3-818266928298
-

கரிம வெளியீடற்ற நாடு எனும் இலக்கை எட்ட வேண்டுமெனில் இவை தேவை என்கிறார்

வரும் 2050ஆம் ஆண்­டிற்­குள் நிகர அள­வில் கரிம வெளி­யீ­டற்ற நாடு எனும் நிலையை எட்ட நாடு­கள் மூன்று அம்­சங்­களில் சாதித்­தாக வேண்­டும்.

கரி­மக் குறை­வுத் தொழில்­நுட்­பங்­க­ளைக் கைக்­கொள்­ளு­தல், பரு­வ­நிலை சார்ந்த நட­வ­டிக்­கை­களுக்கு நிதி ஒதுக்­கீடு, அனைத்­து­லக அள­வில் சிறந்த ஒத்­து­ழைப்பு ஆகி­ய­வையே அம்­மூன்று அம்­சங்­கள்.

பரு­வ­நிலை மாற்­றம் ஏற்­ப­டுத்த­வல்ல பேர­ழிவு விளை­வு­க­ளைத் தவிர்க்­க­வும் வெப்­ப­ம­ய­மா­தலை 1.5 டிகிரி செல்­சி­ய­சுக்­குக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­வும் உல­கிற்கு உதவ இந்­தக் கால­வ­ரிசை மிக­வும் முக்­கி­யம் என்று நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ வலி­யுறுத்தி­யுள்­ளார்.

தெமா­செக் நிறு­வ­னத்­தின் சுற்­றுச்­சூ­ழல் தொடர்­பான 'எக்­கோஸ்­பெ­ரிட்டி வார' கருத்­த­ரங்கில் அமைச்­சர் ஃபூ நேற்று கலந்­து­கொண்டு இவ்­வாறு பேசி­னார்.

கடல்­துறை, விமா­னத் துறை உள்­ளிட்­ட­வற்­றில் கரி­மம் நிறைந்த புதை­ப­டிம எரி­பொ­ரு­ளுக்கு மாற்­றாக ஹைட்­ர­ஜ­னைப் பயன்­ப­டுத்­த­லாம் என்று திரு­வாட்டி ஃபூ குறிப்­பிட்­டார்.

2050ஆம் ஆண்­டிற்­குள் சிங்­கப்­பூர் தனது எரி­சக்­தித் தேவை­யில் 50 விழுக்­காட்டை ஹைட்­ர­ஜனைக் கொண்டு பூர்த்­தி­செய்ய சிங்­கப்­பூர் திட்­ட­மி­டு­கிறது.

பரு­வ­நிலை சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கான நிதித் தேவை­களுக்கு உலக அள­வில் அதிக முத­லீடு செய்­யப்­பட வேண்­டும் என்­றும் அமைச்­சர் ஃபூ வலி­யுறுத்­தி­னார்.

2050ஆம் ஆண்­டிற்­குள் கரிம வெளி­யீ­டற்ற நிலையை எட்ட ஓராண்­டிற்கு 9.2 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$12.4 டிரில்­லி­யன்) பரு­வ­நிலை சார்ந்த நட­வடிக்­கை­க­ளுக்கு முத­லிட வேண்­டும் என்று அனைத்­து­லக மேலாண்மை ஆலோ­ச­னைக் குழு­ம­மான மெக்­கின்சி தெரி­வித்தி­ருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

ஆனால், இப்­போது அதற்­குக் கிட்­டத்­தட்ட மூன்­றில் ஒரு பங்­குத் தொகை, அதா­வது 3.5 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் குறை­வா­கச் செல­வி­டப்­ப­டு­வ­தா­க­வும் அந்­நி­று­வ­னம் குறிப்­பிட்­டுள்­ளது.

கரி­மப் புள்ளி உடன்­பாடு தொடர்­பில் சிங்­கப்­பூர்-கானா இடை­யி­லான பேச்­சு­வார்த்தை நிறை­வு­பெற்­று­விட்­ட­தாக திரு­வாட்டி ஃபூ தெரி­வித்­தார்.

கானா­வி­ட­மி­ருந்து கரி­மப் புள்ளி­க­ளைப் பெற்று, சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­கள் தாங்­கள் வெளி­யிடும் கரிம அளவை ஈடு­செய்ய இந்த உடன்­பாடு உத­வும்.

பூட்­டான், கம்­போ­டியா, கொலம்­பியா, வியட்­னாம், பெரு போன்ற நாடு­க­ளு­ட­னும் இது­போன்ற உடன்­பாட்­டைச் செய்­து­கொள்ள நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இது, பரு­வ­நிலை மாற்­றத்தை எதிர்­கொள்ள உல­க­ள­வில் மேம்­பட்ட ஒத்­து­ழைப்­பிற்­கான தேவை­யைக் கோடிட்­டுக்­காட்­டு­வ­தாக உள்­ளது என்­றும் திரு­வாட்டி ஃபூ சுட்­டி­னார்.

நாளை­யு­டன் முடி­வ­டை­யும் மூன்று நாள் 'எக்­கோஸ்­பெ­ரிட்டி' வாரக் கருத்­தரங்கு மரினா பே சேண்ட்ஸ் கண்­காட்சி, மாநாட்டு மையத்­தில் நடை­பெ­று­கிறது.