சாலை விபத்து: உரிமம் இல்லாத ஓட்டுநர் சிக்கினார்

சாலை விபத்து: உரிமம் இல்லாத ஓட்டுநர் சிக்கினார்

1 mins read
b7a839fd-34b2-4630-a0b3-822baeb9a90f
-

ஓட்­டு­நர் உரி­மம் இன்றி வாக­னம் ஓட்­டிய குற்­றத்­துக்­காக

31 வயது ஆட­வர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்டு உள்­ளார். வாகன உரி­மை­யா­ள­ரின் சம்­ம­த­மின்றி வாக­னம் ஓட்­டிய குற்­றத்­தை­யும் அவர் புரிந்­துள்ா­ளர்.

ஈசூ­னில் அவர் ஓட்­டிச் சென்ற வாக­னம் விபத்­தில் சிக்­கி­ய­தைத் தொடர்ந்து அவ­ரது குற்­றங்­கள் வெளிச்­சத்­துக்கு வந்­தன.

சாலை­யோர விளக்­குக் கம்­பம் ஒன்­றின்­மீது வெண்­ணிற கார் ஒன்று மோதி­ய­தால் காரின் 'பம்­பர்' உடைந்து விழுந்­ததை ஃபேஸ்புக்­கில் பதி­வேற்­றப்­பட்ட காணொளி காட்­டி­யது. சேத­ம­டைந்த வாக­னத்தை இழுத்­துச் செல்­வ­தற்­கான வாக­னம் ஒன்­றும் சம்­பவ இடத்­தில் காணப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் குறித்து காவல்­துறை­யி­டம் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' கேட்­ட­றிந்­தது.

ஈசூன் அவென்யூ 6ல் காரும் வேனும் சம்பந்தப்பட்ட விபத்து நிகழ்ந்தி­ருப்­ப­தாக திங்­கட்­கி­ழமை இரவு 7.30 மணி­வாக்­கில் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை கூறி­யது. கார் ஓட்­டு­நர் கைது செய்­யப்­பட்ட வேளை­யில் 32 வயது வேன் ஓட்­டு­நர் விசா­ரணை­யில் உதவி வரு­வ­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.