வீட்டில் கூண்டுகளில் அடைக்கப்பட்ட இரண்டு பூனைகள் மீட்பு

வீட்டில் கூண்டுகளில் அடைக்கப்பட்ட இரண்டு பூனைகள் மீட்பு

3 mins read
df031a87-da52-44d9-9578-53d9bb10388a
-

ஹேவ்­லாக் சாலைக்கு அரு­கி­லுள்ள ஜாலான் மின்­யாக் வாடகை குடி­யி­ருப்­பி­லி­ருந்து மிக­வும் மெலிந்த நிலை­யில் இரண்டு பூனை­கள் செவ்­வாய்க்­கி­ழமை மீட்­கப்­பட்­டன. அவை கூண்­டில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தன. அந்த கூண்­டில் மூன்று பூனை­க­ளின் எலும்­புக்­கூ­டு­களும் இருந்­தன.

தேசிய பூங்­காக் கழ­கத்­தின் கீழ் இயங்­கும் விலங்கு, கால்­நடைப் பிரிவு அந்த இரண்­டு பூனை­களை எடுத்­துச்­சென்­றது. தற்­போது அவை அதன் பரா­ம­ரிப்­பில் உள்­ளன.

கடந்த திங்­கட்­கி­ழமை குடி­யி­ருப்­பா­ளர் ஒரு­வர் சாயாங் என்­னும் ஃபேஸ்புக் குழு­வில் பூனை­க­ளுக்கு உதவி வேண்­டும் என்று பதி­விட்­டி­ருந்­தார். அந்த பதி­வைப் பார்த்­த­வர்­கள் மீட்­புப் படை­யி­ன­ருக்கு தக­வல் தெரி­வித்­த­னர். அந்த குடி­யி­ருப்­பா­ளர் காவல்­துறை, விலங்கு கால்­நடைப் பிரிவு, வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் (வீவக) ஆகி­ய­வற்­றுக்­கும் தக­வல் தெரி­வித்­தி­ருந்­தார்.

"நான் செவ்­வாய்க்­கி­ழமை மதி­யம் அங்கு சென்­றேன். அந்த வீட்­டில் வாட­கைக்­குக் குடி­யி­ருப்­ப­வ­ரின் மக­ளி­டம் அனு­மதி பெற்று வீட்­டுக்­குள் நுழைந்­தேன். என்­னு­டன் காவல்­துறை, வீவக அதி­கா­ரி­களும் இருந்­த­னர்," என்று பூனை­களை மீட்­கும் தன்­னார்­வ­ல­ரான 'வாத்தி' என்­ப­வர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

மேலும் அவர், "பூனை­கள் அந்த பெண்­ணு­டை­யது என்­ப­தை­யும் நாங்­கள் அவ­ரி­டம் கேட்டு உறு­தி­செய்­து­கொண்­டோம். அவை சமை­யல் அறை­யில் உள்ள கூண்­டில் அடைக்­கப்­பட்­டி­ருந்­தன. உண­வுக்­கா­க­வும் தண்­ணீ­ருக்­கா­க­வும் அவை வெளியே செல்ல அங்கு வழி இல்லை," என்­றும் கூறி­னார்.

அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பகிர்ந்த காணொ­ளி­யில், அந்த பூனை­க­ளைப் பார்க்­கும் போது அவை எலும்­பும் தோலு­மாக இருந்­தன. அவை குறைந்­தது ஒரு மாதத்­திற்­கா­வது உண­வும் தண்­ணீ­ரும் இல்­லா­மல் இருந்­தி­ருக்­கக்­கூ­டும் என்று அனு­மா­னிக்க முடிந்­தது.

திரு­வாட்டி வாத்தி மேலும் கூறு­கை­யில், "நான் இது போன்ற சம்­ப­வங்­கள் குறிப்­பாக, வாடகை வீடு­களில் நிறை­யப் பார்த்­தி­ருக்­கி­றேன். வாட­கைக்கு இருப்­ப­வர்­கள் பூனை­களை அவர்­கள் அந்த வீட்டை விட்டு வெளி­யே­றும்­போது அங்­கேயே விட்டு விட்டு செல்­கின்­ற­னர்.

"அப்­படி விடப்­பட்ட பெரும்­பா­லா­ன பூனை­கள் உணவு இல்­லா­மல், நாங்­கள் கண்­டு­பிடிக்­கும்­போது அவை எலும்­பும் தோலு­மாக இருக்­கும்," என்­றும் கூறி­னார்.

ஜாலான் மின்­யாக்­கில் ஒரு வீட்­டில் பூனை­கள் சரி­யா­ன பரா­ம­ரிப்பு இல்­லா­மல் இருப்­ப­தாக தங்­க­ளுக்­குத் தக­வல் வந்­தது. அது தொடர்­பாக விசா­ரணை நடந்து வரு­கிறது என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சின் கேள்­விக்கு விலங்கு, கால்­ந­டைப் பிரி­வின் குழு­மத் தலை­வர் ஜெசிகா குவாக் பதி­ல­ளித்­தார்.

"விலங்­கு­க­ளைப் புறக்­க­ணிப்­ப­வர்­க­ளுக்­கும் கைவி­டு­ப­வர்­களுக்­கும் எதி­ராக கடு­மை­யான சட்­டங்­கள் இயற்ற வேண்­டும். இது­போன்ற சம்­ப­வங்­கள் மேலும் தொட­ரக்­கூ­டாது. தங்­கள் செல்­லப்­பி­ரா­ணி­க­ளைக் கைவி­டும் பொறுப்­பற்ற உரி­மை­யா­ளர்­களுக்கு எதி­ரான சட்­டம் கடு­மை­யாக இருக்க வேண்­டும். தற்­போது இருக்­கும் சட்­டம் மிக­வும் கடு­மை­யான தண்­ட­னை­கள் வழங்­கு­வ­தில்லை. உணவு, தண்­ணீர் கொடுக்­கா­மல் விலங்­கு­க­ளைக் கூண்­டு­களில் அடைத்து வைப்­பது பெரி­ய குற்­றம்," என்­றும் கூறி­னார் திரு­வாட்டி வாத்தி.

செல்­லப்­பி­ரா­ணி­களை கைவி­டு­ப­வர்­கள் மீது விலங்­கு­கள், பற­வை­கள் பாது­காப்பு சட்­டத்­தின் கீழ் வழக்கு பதிவு செய்­ய­லாம்.

முதல்­முறை தவறு செய்­தால் $10,000 வரை அப­ரா­தம், 12 மாதங்­கள் வரை சிறை தண்­டனை அல்­லது இரண்­டுமே விதிக்­க­ப்படலாம்.

2022ஆம் ஆண்டு மட்­டும் விலங்கு, கால்­ந­டைப் பிரிவு 310 செல்­லப்­பி­ரா­ணி­கள் கைவி­டப்­பட்ட சம்­ப­வங்­களை விசா­ரித்­தது. முந்­தைய ஆண்­டு­களை ஒப்­பிட்டுப் பார்க்­கும்போது 2022ஆம் ஆண்டு அதி­க­மான சம்­ப­வங்­கள் நடந்­துள்­ளன," என்று அது விவ­ரித்­தது.

"செல்­லப்­பி­ரா­ணி­க­ளின் உரி­மை­யா­ளர்­கள் அவற்­றின் பரா­ம­ரிப்பு தரம், தங்­கு­மி­டம், உணவு, தண்­ணீர் பாது­காப்­பா­க­வும், பொருத்­த­மா­க­வும் இருக்­கி­றதா என்­பதை அடிக்­கடி உறு­தி­செய்ய வேண்­டும்.

"விலங்­கு­க­ளின் ஆரோக்­கி­யத்­தை­யும் நல­னை­யும் பாது­காப்­ப­தில் செல்­லப்­பி­ராணி உரி­மை­யா­ளர்­கள், அவற்றை விற்­ப­வர்­கள், சமூ­கம் உட்­பட அனை­வ­ருக்­கும் பொறுப்பு இருக்­கிறது," என்­றும் திரு­வாட்டி குவாக் கூறி­னார்.

செல்­லப்­பி­ரா­ணி­களை உரி­மை­யா­ளர்­கள் கைவி­டும் சம்­ப­வங்­கள் பற்றி தெரி­விக்க விரும்­பு­ம் பொதுமக்கள் www.avs.gov.sg/feedback என்னும் இணையத் தளம் மூல­மா­கவோ 1800-476-1600 என்ற எண் மூல­மா­கவோ விலங்­கு­கள் மீட்பு நிலை­யத்­துக்­குத் தெரி­விக்­க­லாம்.