தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிறுவனிடம் கத்தியைக் காட்டி கொள்ளை; ஒரு மணி நேரத்தில் சிக்கிய ஆடவர்

1 mins read
fe205706-59b2-4bd1-abe7-5f214e459e39
-

புக்­கிட் பாத்­தோக்­கில் சிறு­வ­னி­டம் கத்­தி­யைக் காட்டி கொள்­ளை­ய­டித்­த­தா­கக் கூறப்­படும் ஆட­வரை தக­வல் கிடைத்த ஒரு மணி நேரத்­தில் காவல்­து­றை­யி­னர் அவரை கைது செய்­துள்­ள­னர்.

முஹ­மட் நூர் காலிக் அப்­துல்லா, 22 மீது நேற்று முறைப்­படி ஆயு­தக் கொள்­ளை­யில் ஈடு­பட்­ட­தா­கக் குற்­றம்­ சாட்­டப்­பட்­டது.

சென்ற செவ்­வாய்க்­கி­ழமை பிற்­ப­கல் 3.00 மணி­ய­ள­வில் புக்­கிட் பாத்­தோக் சென்ட்­ர­லில் கூர்­மை­யான கத்­தி­யைக் காட்டி சிறு­வ­னி­ட­மி­ருந்து பணப்பை, கைப்­பேசி, ஆப்­பிள் ஏர்­போட்ஸ் ஆகி­ய­வற்றை அவர் கொள்­ளை­யடித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இது குறித்து அன்று மாலையே காவல்­து­றைக்­குத் தக­வல் கிடைத்­தது. உட­ன­டி­யாக சம்­பவ இடத்­தில் ஜூரோங் காவல் நிலைய அதி­கா­ரி­கள் தீவிர விசா­ரணை நடத்­தி­னர்.

பின்­னர் காவல்­து­றை­யின் படக்­க­ரு­வி­களில் பதி­வான காட்சிகளை ஆராய்ந்த அவர்­கள், சந்­தேக நப­ரின் அடை­யா­ளத்­தைக் கண்­டு­பி­டித்­த­னர்.

ஒரு மணி நேரத்­தில் சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்­ட­தாக காவல்­து­றை­யின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

சிறு­வ­னின் பணப்பை, கைப்பேசி ஆகி­யவை மீட்­கப்­பட்­டன. நூரின் வழக்கு இம்­மா­தம் 15ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆயு­தக் கொள்ளை குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­பட்­டால் குற்­ற­வா­ளிக்கு இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டு வரை சிறைத் தண்­ட­னை­யும் குறைந்­தது 12 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­ ப­ட­லாம்.