தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வேட்' வரி மோசடியில் ஆடவருக்குச் சிறை

1 mins read
ba804f4e-6306-44d0-94ce-7ef8cd51b44b
-

சிங்­கப்­பூ­ர­ரான 40 வயது எம்ஜே இயர்ன் ஜோஸுக்கு 'வேட்' வரி மோச­டி­யில் ஈடு­பட்­ட­தற்­காக சிறை, அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டது.

மேலும் வெளி­நாட்­டி­லி­ருந்து கொண்டுவந்த விலை­யு­யர்ந்த பொருளை ஜிஎஸ்டி விதி­மு­றைப்­படி தெரி­விக்­கா­த­தால் அச்­சட்­டத்­தின் கீழ் அவ­ருக்கு தண்­டனை விதிக்­கப்­பட்­டது என்று சிங்­கப்­பூர் காவல் படை­யும் சுங்­க­வ­ரித் துறை­யும் கூட்­டாக தெரி­வித்­தன. மே மாதம், 24ஆம் தேதி அவ­ருக்கு $6,000 அப­ரா­த­மும், நான்கு மாதங்­கள் இரண்டு வாரங்­கள் சிறைத் தண்­ட­னை­யும் விதிக்­கப்­பட்­டது.

2022ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் ஜோஸ் மற்­றும் வேறு சிலரை லண்­ட­னுக்கு அனுப்பி போலி நகை­களை வாங்கி அதற்­கான வேட் வரிக்கு கோரிக்கை விடுப்­ப­தற்­காக சிங்­கப்­பூ­ர­ரான ஆலன் இயோ அவர்­களை பணி­யில் அமர்த்­தி­யி­ருந்­தார்.

அதன்­படி ஜோஸ் போலி நகையை வாங்கி அதற் கான 30,940 யூரோ (S$44,650) வேட் வரியை திரும்­பப் பெறு­வ­தற்கு கோரிக்கை விடுத்­தார்.

மேலும் ஜோஸ் லண்­ட­னில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு கொண்டு வந்த நகை­கள் குறித்து அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­விக்­கா­த­தோடு அதற்­கான ஜிஎஸ்டி வரி­யைக் கட்­ட­வில்லை. இதற்­காக 2022ஆம் ஆண்டு டிசம்­ப­ரில் அவரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர்.

அடுத்த நாள் ஜோஸ், இயோ உட்­பட இந்த மோச­டி­யில் தொடர்­பு­டைய நான்கு பேரை­யும் காவல்­துறை கைது­ செய்­தது. இயோ­வுக்­கும் ஜோஸ் உடன் இணைந்து இந்த வேட் வரி மோச­டி­யில் ஈடு­பட்­ட­தற்­காக $6,000 அப­ரா­த­மும் 37 மாதங்­கள் சிறைத் ­தண்­ட­னை­யும் ஏப்­ரல் 14ஆம் தேதி விதிக்­கப்­பட்­டது.