முன்பு கெப்பல் கிளப் இருந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணியில் ஒரு சில கலைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவை வரலாற்று முக்கியத்தும் வாய்ந்தது அல்ல என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் அந்த இடத்தின் வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் முறைப்படி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும் இவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுத் திட்டங்களில் கண்டுபிடிப்புகளை எப்படி பயன்படுத்துவது என்பதும் ஆராயப்படவிருக்கிறது.
சென்ற ஆண்டு செப்டம்பரில் அகழாய்புப் பணிகளுடன் வரலாற்றுச் சிறப்புகளைக் கண்டு பிடிக்கும் ஆய்வு தொடங்கப்பட்டது.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சில கலைப்பொருள்கள் ஆர்வமிக்கவையாக இருந்தாலும் அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ நேற்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
பெரும்பாலான பொருள்கள் 1900களில் பழைய அலெக்சாண்டிரா செங்கல் சூளையில் தயாரிக்கப்பட்ட செங்கற்கள் ஆகும்.
அலெக்சாண்டிரா என்ற பெயரில் செயல்பட்ட சூளையில் தயாரிக்கப்பட்ட செங்கற்கள் சிங்கப்பூரில் பொதுமக்களுக்கான கட்டு மானத் திட்டங்களுக்குப் பயன் படுத்தப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் பழமைக்காகப் பாதுகாக்கப்படும் அருகிலுள்ள புக்கிட் செர்மின் கட்டடத்தை ஒத்துள்ள அடித்தளத்தின் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
ஆய்வின் கண்டுபிடிப்புகள் கெப்பல் கிளப் மற்றும் அங்கு நடந்த கடந்த கால செயல்பாடு களைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்று திரு டெஸ்மண்ட் லீ கூறினார்.
கெப்பலுக்கான திட்டங்களில் இந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளைப் புகுத்துவது குறித்து சாத்தியமான வழிகளை அதிகாரிகள் ஆராய்வார்கள் என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஏப்ரலில் கெப்பல் கிளப் இருந்த 48 ஹெக்டர் நிலப்பரப்பில் 9,000 வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதில் 6,000 பொது குடியிருப்பு வீடுகளும் 3,000 தனியார் வீடுகளும் கட்டப்படவுள்ளன.
இந்த இடத்தில் தேவைக்கு ஏற்ப கட்டப்படும் வீடுகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.
இது பற்றிய விற்பனை அறி விப்பு மூன்று ஆண்டுகளுக்குள் வெளியிடப்படும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.

