தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐக்கியத்தையும் மீள்திறனையும் வலுப்படுத்த வேண்டும்

2 mins read
34e1a3ee-9dd9-42ca-b04c-734d91df77aa
-

அரசதந்திரம் மேலும் சிக்கலான ஒன்றாக உருவெடுப்பு: அதிபர் ஹலிமா

தன்­னைப்­பே­ணித்­த­னம், தேசி­ய­வாத உணர்வு போன்­றவை அதி­க­ரித்­து­வ­ரும் சூழ­லில், அர­ச­தந்­தி­ரம் என்­பது இப்­போது மேலும் சிக்­க­லான ஒன்றாக உரு­வெடுத்து உள்­ள­தாக அதி­பர் ஹலிமா யாக்­கோப் (படம்) கூறி­யுள்­ளார்.

எதிர்­வ­ரும் காலத்­திற்கு புறச் சூழல் தொடர்ந்து நிச்­ச­ய­மற்­ற­தாக இருக்­கும் வேளை­யில், ஒரு தேச­மாக சிங்­கப்­பூ­ரின் ஐக்­கி­ய­மும் ஒன்­று­பட்டு நிற்க அது கொண்­டி­ருக்­கும் உறு­தி­யும் மேலும் முக்­கி­ய­மா­ன­தாகி இருப்­பதாக அவர் குறிப்­பிட்­டார்.

வெளி­யு­றவு அமைச்சு நேற்று ஏற்­பாடு செய்த 13வது எஸ்.ராஜரத்­னம் விரை­வுரை நிகழ்ச்­சி­யில் பேசிய திரு­வாட்டி ஹலிமா, கொவிட்-19 பெருந்­தொற்­றுக்­குப் பல நாடு­களும் தயா­ராக இல்­லா­த­தைச் சுட்­டி­னார்.

"அடுத்த பெருந்­தொற்று எப்­போது வேண்­டு­மா­னா­லும் ஏற்­ப­ட­லாம். அத்­த­கைய உல­க­ளா­விய பிரச்­சி­னை­க­ளைக் கையாள பல­தரப்பு ஒத்­து­ழைப்பே ஒரே­வழி என்­பதை கொவிட்-19லிருந்து நாம் கற்­றுக்­கொண்­டோம்," என்­றார் அவர்.

"நிச்­ச­ய­மற்ற புறச் சூழலை எதிர்­கொள்ள மீள்­தி­ற­னை­யும் சமு­தா­யத்­தில் நம்­பிக்­கை­யை­யும் வலுப்­ப­டுத்­து­வது உத­வும்," என்­றும் திரு­வாட்டி ஹலிமா சொன்­னார்.

எனி­னும், சிங்­கப்­பூர் சமு­தா­யம் முதிர்ச்சி அடைந்­து­வ­ரும் வேளை­யில் மக்­க­ளு­டைய விருப்­பங்­கள் வேறு­ப­டு­வ­தால் இது சவா­லாக இருக்­கும் என்­றார் அவர்.

ஒரு நாடாக மீள்­தி­றனை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­மு­றை­களை அவர் கோடிட்­டுக் காட்­டி­னார். நியா­ய­மான, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் சமு­தா­யத்தை நோக்­கிச் செயல்­ப­டு­வது, கல்­வி­யி­லும் திறன் பயிற்­சி­யி­லும் முத­லீடு செய்­வது, சோதித்­துப் பார்க்­கும் சூழலை ஏற்­ப­டுத்­தித் தரு­வது, வலு­வான சமூக உணர்­வைக் கொண்­டி­ருப்­பது உள்­ளிட்­டவை அவற்­றில் அடங்­கும்.

புதிய வாய்ப்­பு­க­ளை­யும் பங்­கா­ளித்­து­வங்­க­ளை­யும் கைப்­பற்ற தொடர்ந்து திறந்த மன­து­டன் இருக்­கும்­படி திரு­வாட்டி ஹலிமா கேட்­டுக்­கொண்­டார். மத்­திய ஆசியா, லத்­தீன் அமெ­ரிக்கா, மத்­திய கிழக்கு, தெற்­கா­சியா, ஆப்­பி­ரிக்கா போன்ற பகு­தி­கள் அசுர வளர்ச்சி கண்­டுள்­ளன என்று சொன்ன அவர், இதைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள சிங்­கப்­பூ­ருக்கு இதுவே உரிய தரு­ணம் என்­றார்.